அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

வண நன்று உடைய வயிரக் கடிப்பு இட்டு

வார்காது தாழப் பெருக்கிக்

குண நன்று உடையர் இக் கோபால பிள்ளைகள்

கோவிந்தா ! நீ சொல்லுக் கொள்ளாய் ;

இணை நன்று அழகிய இக் கடிப்பு இட்டால்

இனிய பலாப்பழம் தந்து

சுண நன்று அணி முலை உண்ணத் தருவன் நான்

சோத்தம், பிரான் ! இங்கே வாராய்.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

சோத்தம் , பிரான்! என்று இரந்தாலும் கொள்ளாய் ;

சுரிகுழலாரொடு நீ போய்க்

கோத்துக் குரவை பிணைந்து இங்கு வந்தால் ,

குணங்கொண்டு இடுவனோ? நம்பீ !

பேர்த்தும் பெரியன அப்பம் தருவன் ,

பிரானே ! திரியிட ஒட்டில் ;

வேய்த் தடந்தோளார் விரும்பு கருங்குழல்

விட்டுவே ! நீ இங்கே வாராய்.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

விண்ணெல்லாம் கேட்க அழுதிட்டாய், உன்வாயில்

விரும்பி அதனை நான் நோக்கி

மண்ணெல்லாம் கண்டு என் மனத்துள்ளே அஞ்சி

மதுசூதனே என்று இருந்தேன் ;

புண் ஏதும் இல்லை, உன்காது மறியும்;

பொறுத்து இறைப் போது இரு, நம்பீ !

கண்ணா ! என் கார்முகிலே ! கடல்வண்ணா !

காவலனே ! முலை உணாயே .

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

முலை ஏதும் வேண்டேன் என்று ஓடி நின்காதிற்

கடிப்பைப் பறித்து எறிந்திட்டு

மலையை எடுத்து மகிழ்ந்து கல்மாரி

காத்துப் பசுநிரை மேய்த்தாய் ;

சிலை ஒன்று இறுத்தாய்; திரிவிக்கிரமா !

திரு ஆயர்பாடிப் பிரானே !

தலை நிலாப் போதே உன்காதைப் பெருக்காதே

விட்டிட்டேன், குற்றம் அன்றே ?

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

வண நன்று உடைய வயிரக் கடிப்பு இட்டு

வார்காது தாழப் பெருக்கிக்

குண நன்று உடையர் இக் கோபால பிள்ளைகள்

கோவிந்தா ! நீ சொல்லுக் கொள்ளாய் ;

இணை நன்று அழகிய இக் கடிப்பு இட்டால்

இனிய பலாப்பழம் தந்து

சுண நன்று அணி முலை உண்ணத் தருவன் நான்

சோத்தம், பிரான் ! இங்கே வாராய்.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

விண்ணெல்லாம் கேட்க அழுதிட்டாய், உன்வாயில்

விரும்பி அதனை நான் நோக்கி

மண்ணெல்லாம் கண்டு என் மனத்துள்ளே அஞ்சி

மதுசூதனே என்று இருந்தேன் ;

புண் ஏதும் இல்லை, உன்காது மறியும்;

பொறுத்து இறைப் போது இரு, நம்பீ !

கண்ணா ! என் கார்முகிலே ! கடல்வண்ணா !

காவலனே ! முலை உணாயே .

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

சோத்தம் , பிரான்! என்று இரந்தாலும் கொள்ளாய் ;

சுரிகுழலாரொடு நீ போய்க்

கோத்துக் குரவை பிணைந்து இங்கு வந்தால் ,

குணங்கொண்டு இடுவனோ? நம்பீ !

பேர்த்தும் பெரியன அப்பம் தருவன் ,

பிரானே ! திரியிட ஒட்டில் ;

வேய்த் தடந்தோளார் விரும்பு கருங்குழல்

விட்டுவே ! நீ இங்கே வாராய்.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

என் குற்றமே என்று சொல்லவும் வேண்டா காண்,

என்னை நான் மண் உண்டேனாக

அன்புற்று நோக்கி அடித்தும் பிடித்தும்

அனைவர்க்கும் காட்டிற்றிலையே ?

வன் புற்று அரவின் பகைக் கொடி வாமன

நம்பீ ! உன்காதுகள் தூரும் ;

துன்புற்றன எல்லாம் தீர்ப்பாய், பிரானே !

திரியிட்டுச் சொல்லுகேன் மெய்யே.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

மெய் என்று சொல்லுவார் சொல்லைக் கருதித்

தொடுப்புண்டாய் வெண்ணெயை என்று

கையைப் பிடித்துக் கரை உரலோடு என்னைக்

காணவே கட்டிற்றிலையே ?

செய்தன சொல்லிச் சிரித்து அங்கு இருக்கில் ,

சிரிதீரா! உன் காது தூரும் ;
கையில் திரியை இடுகிடாய். இந்நின்ற
காரிகையார் சிரியாமே .

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

காரிகையார்க்கும் உனக்கும் இழுக்கு உற்று என்

காதுகள் வீங்கி எரியில் ?

தாரியா தாகில் தலை நொந்திடும் என்று

விட்டிட்டேன், குற்றமே அன்றே ?

சேரியிற் பிள்ளைகள் எல்லாரும் காது

பெருக்கித் திரியவும் காண்டி ;

ஏர் விடை செற்று இளங்கன்று எறிந்திட்ட

இருடிகேசா ! என்தன் கண்ணே !

Get in touch

தொடர்பு கொள்ள

Dear Reader,
To contact us please drop an e-mail to any one of the e-mail addresses mentioned below.
meeradevotees@gmail.com
radha.services@gmail.com
ramanujaservices@gmail.com