அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

பூணித் தொழுவினிற் புக்குப்

புழுதி அளைந்த பொன்மேனி

காணப் பெரிதும் உகப்பன்,

ஆகிலும் கண்டார் பழிப்பர் ;

நாண் இத்தனையும் இலாதாய் !

நப்பின்னை காணிற் சிரிக்கும்;

மாணிக்கமே ! என் மணியே !

மஞ்சனம் ஆட நீ வாராய்.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

கார் மலி மேனி நிறத்துக் கண்ணபிரானை உகந்து

வார் மலி கொங்கை யசோதை மஞ்சனம் ஆட்டிய ஆற்றைப்

பார் மலி தொல் புதுவைக் கோன் பட்டர்பிரான் சொன்ன பாடல்

சீர் மலி செந்தமிழ் வல்லார் தீவினை யாதும் இலரே .

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

பின்னை மணாளனை பேரிற் கிடந்தானை,

முன்னை அமரர் முதற் தனி வித்தினை,

என்னையும் எங்கள் குடி முழுது ஆட்கொண்ட

மன்னனை, வந்து குழல்வாராய், அக்காக்காய்!

மாதவன்தன் குழல்வாராய், அக்காக்காய் !

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

பேயின் முலை உண்ட பிள்ளை இவன், முன்னம்

மாயச் சகடும் மருதும் இறுத்தவன்,

காயாமலர் வண்ணன் ; கண்ணன் கருங்குழல்

தூய்து ஆக வந்து குழல்வாராய் அக்காக்காய்!

தூமணி வண்ணன் குழல்வாராய், அக்காக்காய்!

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

திண்ணக் கலத்தில் திரை உறிமேல் வைத்த

வெண்ணெய் விழுங்கி விரைய உறங்கிடும்

அண்ணல்: அமரர் பெருமானை , ஆயர்தம்

கண்ணனை வந்து குழல்வாராய், அக்காக்காய்!
கார்முகில் வண்ணன் குழல்வாராய், அக்காக்காய் !

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

பள்ளத்தில் மேயும் பறவை உருக் கொண்டு

கள்ள அசுரன் வருவானைத் தான் கண்டு,

புள்இது என்று பொதுக்கோ வாய் கீண்டிட்ட

பிள்ளையை வந்து குழல்வாராய், அக்காக்காய்!

பேய் முலை உண்டான் குழல்வாராய், அக்காக்காய்!

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

கற்றினம் மேய்த்துக் கனிக்கு ஒரு கன்றினைப்

பற்றி எறிந்த பரமன் திருமுடி,

உற்றன் பேசி நீ ஓடித் திரியாதே,

அற்றைக்கும் வந்து குழல்வாராய், அக்காக்காய் !

ஆழியான்தன் குழல்வாராய் அக்காக்காய் !

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

கிழக்கிற் குடி மன்னர் கேடு இலாதாரை

அழிப்பான் நினைந்திட்டு அவ் ஆழி அதனால்

விழிக்கும் அளவிலே வேர் அறுத்தானைக்

குழற்கு அணி ஆகக் குழல்வாராய் ! அக்காக்காய்!

கோவிந்தன் தன் குழல்வாராய் , அக்காக்காய்!

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

பிண்டத் திரளையும் பேய்க்கு இட்ட நீர்ச் சோறும்

உண்டற்கு வேண்டி நீ ஓடித் திரியாதே,

அண்டத்து அமரர் பெருமான் அழகு அமர்

வண்டு ஓத்து இருண்ட குழல்வாராய், அக்காக்காய்!

மாயவன்தன் குழல்வாராய் , அக்காக்காய்!

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

உந்தி எழுந்த உருவ மலர்தன்னில்

சந்தச் சதுமுகன்தன்னைப் படைத்தவன்

கொந்தக் குழலைக் குறந்து புளி அட்டித்

தந்தத்தின் சீப்பால் குழல்வாராய், அக்காக்காய்!

தாமோதரன் தன் குழல்வாராய், அக்காக்காய்!

Get in touch

தொடர்பு கொள்ள

Dear Reader,
To contact us please drop an e-mail to any one of the e-mail addresses mentioned below.
meeradevotees@gmail.com
radha.services@gmail.com
ramanujaservices@gmail.com