அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

கறந்த நற்பாலும் தயிரும்

கடைந்து உறிமேல் வைத்த வெண்ணெய்

பிறந்ததுவே முதலாகப்

பெற்றறியேன், எம்பிரானே !

சிறந்த நற்றாய் அலர் தூற்றும்

என்பதனால் பிறர் முன்னே

மறந்தும் உரையாட மாட்டேன் !

மஞ்சனம் ஆட நீ வாராய்.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

கன்றினை வால் ஓலை கட்டி

கனிகள் உதிர எறிந்து

பின் தொடர்ந்து ஓடி ஓர் பாம்பைப்

பிடித்துக்கொண்டு ஆட்டினாய் போலும்;

நின்திறத்தேன் அல்லேன், நம்பீ !

நீ பிறந்த திரு நன்னாள்,

நன்று நீ நீராட வேண்டும் ;

நாரணா ! ஓடாதே வாராய்.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

பூணித் தொழுவினிற் புக்குப்

புழுதி அளைந்த பொன்மேனி

காணப் பெரிதும் உகப்பன்,

ஆகிலும் கண்டார் பழிப்பர் ;

நாண் இத்தனையும் இலாதாய் !

நப்பின்னை காணிற் சிரிக்கும்;

மாணிக்கமே ! என் மணியே !

மஞ்சனம் ஆட நீ வாராய்.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

கார் மலி மேனி நிறத்துக் கண்ணபிரானை உகந்து

வார் மலி கொங்கை யசோதை மஞ்சனம் ஆட்டிய ஆற்றைப்

பார் மலி தொல் புதுவைக் கோன் பட்டர்பிரான் சொன்ன பாடல்

சீர் மலி செந்தமிழ் வல்லார் தீவினை யாதும் இலரே .

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

பின்னை மணாளனை பேரிற் கிடந்தானை,

முன்னை அமரர் முதற் தனி வித்தினை,

என்னையும் எங்கள் குடி முழுது ஆட்கொண்ட

மன்னனை, வந்து குழல்வாராய், அக்காக்காய்!

மாதவன்தன் குழல்வாராய், அக்காக்காய் !

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

பேயின் முலை உண்ட பிள்ளை இவன், முன்னம்

மாயச் சகடும் மருதும் இறுத்தவன்,

காயாமலர் வண்ணன் ; கண்ணன் கருங்குழல்

தூய்து ஆக வந்து குழல்வாராய் அக்காக்காய்!

தூமணி வண்ணன் குழல்வாராய், அக்காக்காய்!

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

திண்ணக் கலத்தில் திரை உறிமேல் வைத்த

வெண்ணெய் விழுங்கி விரைய உறங்கிடும்

அண்ணல்: அமரர் பெருமானை , ஆயர்தம்

கண்ணனை வந்து குழல்வாராய், அக்காக்காய்!
கார்முகில் வண்ணன் குழல்வாராய், அக்காக்காய் !

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

பள்ளத்தில் மேயும் பறவை உருக் கொண்டு

கள்ள அசுரன் வருவானைத் தான் கண்டு,

புள்இது என்று பொதுக்கோ வாய் கீண்டிட்ட

பிள்ளையை வந்து குழல்வாராய், அக்காக்காய்!

பேய் முலை உண்டான் குழல்வாராய், அக்காக்காய்!

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

கற்றினம் மேய்த்துக் கனிக்கு ஒரு கன்றினைப்

பற்றி எறிந்த பரமன் திருமுடி,

உற்றன் பேசி நீ ஓடித் திரியாதே,

அற்றைக்கும் வந்து குழல்வாராய், அக்காக்காய் !

ஆழியான்தன் குழல்வாராய் அக்காக்காய் !

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

கிழக்கிற் குடி மன்னர் கேடு இலாதாரை

அழிப்பான் நினைந்திட்டு அவ் ஆழி அதனால்

விழிக்கும் அளவிலே வேர் அறுத்தானைக்

குழற்கு அணி ஆகக் குழல்வாராய் ! அக்காக்காய்!

கோவிந்தன் தன் குழல்வாராய் , அக்காக்காய்!

Get in touch

தொடர்பு கொள்ள

Dear Reader,
To contact us please drop an e-mail to any one of the e-mail addresses mentioned below.
meeradevotees@gmail.com
radha.services@gmail.com
ramanujaservices@gmail.com