Songs
திருவாய்மொழி.245
அருளியவர்: நம்மாழ்வார்
திருவாய்மொழி
பாசுர எண்: 3035
பாசுரம்
ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி,
வழுவிலா அடிமை செய்ய வேண்டும்நாம்,
தெழிகு ரல்அரு வித்திரு வேங்கடத்து,
எழில்கொள் சோதி எந்தைதந்தை தந்தைக்கே (2) 3.3.1
Summary
At all times and forever by his side, we must perform stainless service, to the radiant Lord of Venkatam, the hill with streams. He is my father’s father.
திருவாய்மொழி.246
அருளியவர்: நம்மாழ்வார்
திருவாய்மொழி
பாசுர எண்: 3036
பாசுரம்
எந்தை தந்தை தந்தை தந்தைக்கும்
முந்தை, வானவர் வானவர் கோனொடும்,
சிந்துபூ மகிழும் திருவேங் கடத்து,
அந்த மில்புகழ்க் காரெழில் அண்ணலே. 3.3.2
Summary
The Lord of Venkatam hill, Lord of cloud-hue and eternal glory, is worshipped with flowers, by Indra and all the celestials.
திருவாய்மொழி.247
அருளியவர்: நம்மாழ்வார்
திருவாய்மொழி
பாசுர எண்: 3037
பாசுரம்
அண்ணல் மாயன் அணிகொள்செந் தாமரைக்
கண்ணன், செங்கனி வாய்க்கரு மாணிக்கம்,
தெண்ணி றைச்சுனை நீர்த்திரு வேங்கடத்து,
எண்ணில் தொல்புகழ் வானவ ரீசனே. 3.3.3
Summary
The cool-springs venkatam Lord of countless glories has beautiful lotus-eyes, a black gem-hue and coral lips.
திருவாய்மொழி.248
அருளியவர்: நம்மாழ்வார்
திருவாய்மொழி
பாசுர எண்: 3038
பாசுரம்
ஈசன் வானவர்க் கென்பனென் றால்,அது
தேச மோதிரு வேங்கடத் தானுக்கு?,
நீச னென்நிறை வொன்றுமி லேன்,என்கண்
பாசம் வைத்த பரஞ்சுடர்ச் சோதிக்கே. 3.3.4
Summary
Does it behove his glory to be praised by me, -lowly and mertless? Yet I have his love!
திருவாய்மொழி.249
அருளியவர்: நம்மாழ்வார்
திருவாய்மொழி
பாசுர எண்: 3039
பாசுரம்
சோதி யாகியெல் லாவுல கும்தொழும்,
ஆதி மூர்த்தியென் றாலள வாகுமோ?,
வேதி யர்முழு வேதத் தமுதத்தை,
தீதில் சீர்த்திரு வேங்கடத் தானையே. 3.3.5
Summary
The glorious Venkatam Lord is the nectar of the Vedas, fitst-cause of all. Can he be praised?
திருவாய்மொழி.25
அருளியவர்: நம்மாழ்வார்
திருவாய்மொழி
பாசுர எண்: 2815
பாசுரம்
அமைவுடை யறநெறி முழுவது முயர்வற வுயர்ந்த,
அமைவுடை முதல்கெடல் ஒடிவிடை யறநில மதுவாம்,
அமைவுடை யமரரும் யாவையும் யாவரும் தானாம,f
அமைவுடை நாரணன் மாயையை யறிபவர் யாரே? 1.3.3
Summary
Who can comprehend the wonders of Narayana? He bears the highest good of Vedic sacrifice. Forever the creates, destroys, and plays between the two. He contains the gods, and the livin and the lifeless.
திருவாய்மொழி.250
அருளியவர்: நம்மாழ்வார்
திருவாய்மொழி
பாசுர எண்: 3040
பாசுரம்
வேங்க டங்கள்மெய்ம் மேல்வினை முற்றவும்,
தாங்கள் தங்கட்கு நல்லன வேசெய்வார்,
வேங்க டத்துறை வார்க்கு நமவென்ன
லாங்க டமை,அ துசுமந் தார்க்கட்கே. 3.3.6
Summary
Those who serve him even by lip alone are rid of past Karmas and relieved of future ones.
திருவாய்மொழி.251
அருளியவர்: நம்மாழ்வார்
திருவாய்மொழி
பாசுர எண்: 3041
பாசுரம்
சுமந்து மாமலர் நீர்சுடர் தீபம்கொண்டு,
அமர்ந்து வானவர் வானவர் கோனொடும்,
நமன்றெ ழும்திரு வேங்கடம் நங்கட்கு,
சமன்கொள் வீடு தரும்தடங் குன்றமே. 3.3.7
Summary
The dark Venkatam Lord worshipped by Indra and all the celestials with flowers, incense, lamp and water, gives up tranquil liberation.
திருவாய்மொழி.252
அருளியவர்: நம்மாழ்வார்
திருவாய்மொழி
பாசுர எண்: 3042
பாசுரம்
குன்றம் ஏந்திக் குளிர்மழை காத்தவன்,
அன்று ஞாலம் அளந்த பிரான்,பரன்
சென்று சேர்திரு வேங்கட மாமலை,
ஒன்று மேதொழ நம்வினை ஓயுமே. (2) 3.3.8
Summary
The wonder-Lord who stopped the rains, and measured the Earth has come to stay in Venkatam. Worshipping him destroys our Karmas.
திருவாய்மொழி.253
அருளியவர்: நம்மாழ்வார்
திருவாய்மொழி
பாசுர எண்: 3043
பாசுரம்
ஓயு மூப்புப் பிறப்பிறப் புப்பிணி,
வீயு மாறுசெய் வான்திரு வேங்கடத்
தாயன், நாண்மல ராமடித் தாமரை,
வாயுள் ளும்மனத் துள்ளும்வைப் பார்கட்கே. 3.3.9
Summary
those who remember the lotus feet of the Cowherd Lord of Venkatam in every act and word shall end their four-fold miseries.