Songs
பெரிய திருமொழி.748
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1695
பாசுரம்
முழுதிவ் வையகம் முறைகெட
மறைதலும் முனிவனும் முனிவெய்தி,
மழுவி னால்மன்னர் ஆருயிர்
வவ்விய மைந்தனும் வாரானால்,
ஒழுகு நுண்பனிக் கொடுங்கிய
பேடையை யடங்கவஞ் சிறைகோலி,
தழுவு நள்ளிருள் தனிமையிற்
கடியதோர் கொடுவினை யறியேனே. 8.5.8
பெரிய திருமொழி.749
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1696
பாசுரம்
கனஞ்செய் மாமதிள் கணபுரத்
தவனொடும் கனவினி லவன்தந்த,
மனஞ்செ யின்பம்வந் துள்புக
வெள்கியென் வளைநெக இருந்தேனை,
சினஞ்செய் மால்விடைச் சிறுமணி
ஓசையென் சிந்தையைச் சிந்துவிக்கும்,
அனந்த லன்றிலின் அரிகுரல்
பாவியே னாவியை யடுகின்றதே. 8.5.9
பெரிய திருமொழி.75
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1022
பாசுரம்
வண்கையானவுணர்க்குநாயகன் வேள்வியில்சென்றுமாணியாய்,
மண்கையாலிரந்தான் மராமரமேழுமெய்தவலத்தினான்,
எண்கையானிமயத்துள்ளான் இருஞ்சோலைமேவியவெம்பிரான்,
திண்கைம்மாதுயரதீர்த்தவன் திருவேங்கடமடைநெஞ்சமே. 1.8.5
Summary
He went to’ the fire-sacrifice of the generous Asura king Mabali, as a manikin and begged for three strides of land. He is the strong one who shot an arrow through seven trees. He is the strong one who shot an arrow through seven trees. He is the many-armed one, the resident of the Himalayas, the Lord of Tirumalirumsolai. He saved the elephant in. distress, he lives in Tiruvenkatam, – thitherward; O Heart!
பெரிய திருமொழி.750
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1697
பாசுரம்
வார்கொள் மென்முலை மடந்தையர்
தடங்கடல் வண்ணனைத் தாள்நயந்து,
ஆர்வத் தாலவர் புலம்பிய
புலம்பலை அறிந்துமுன் உரைசெய்த,
கார்கொள் பைம்பொழில் மங்கையர்
காவலன் கலிகன்றி யொலிவல்லார்,
ஏர்கொள் வைகுந்த மாநகர்
புக்கிமை யவரொடும் கூடுவரே. (2) 8.5.10
பெரிய திருமொழி.751
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1698
பாசுரம்
தொண்டீர். உய்யும் வகைகண்டேன்
துளங்கா அரக்கர் துளங்க முன்
திண்டோள் நிமிரச் சிலைவளையச்
சிறிதே முனிந்த திருமார்பன்,
வண்டார் கூந்தல் மலர்மங்கை
வடிக்கண் மடந்தை மாநோக்கம்
கண்டாள், கண்டு கொண்டுகந்த
கண்ண புரம்நாம் தொழுதுமே. (2) 8.6.1
பெரிய திருமொழி.752
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1699
பாசுரம்
பொருந்தா அரக்கர் வெஞ்சமத்துப்
பொன்ற அன்று புள்ளூர்ந்து,
பெருந்தோள் மாலி தலைபுரளப்
பேர்ந்த அரக்கர் தென்னிலங்கை,
இருந்தார் தம்மை யுடன்கொண்டங்
கெழிலார் பிலத்துப் புக்கொளிப்ப,
கருந்தாள் சிலைகைக் கொண்டானூர்
கண்ண புரம்நாம் தொழுதுமே. 8.6.2
பெரிய திருமொழி.753
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1700
பாசுரம்
வல்லி யிடையாள் பொருட்டாக
மதிள்நீ ரிலங்கை யார்கோவை,
அல்லல் செய்து வெஞ்சமத்துள்
ஆற்றல் மிகுந்த ஆற்றலான்,
வல்லாள் அரக்கர் குலப்பாவை
வாட முனிதன் வேள்வியை,
கல்விச் சிலையால் காத்தானூர்
கண்ண புரம்நாம் தொழுதுமே. 8.6.3
Summary
For the sake of the creeper-like tender waisted Lady Sitamma; He did wield a bow and burn the city of Lakna with arrow to dust He did stand guard over sage’s Viswamitra sacrifice! He destroyed Rakshasi Tataka; -kannapuram, O, let us worship!
பெரிய திருமொழி.754
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1701
பாசுரம்
மல்லை முந்நீ ரதர்பட
வரிவெஞ் சிலைகால் வளைவித்து,
கொல்லை விலங்கு பணிசெய்யக்
கொடியோன் இலங்கை புகலுற்று,
தொல்லை மரங்கள் புகப்பெய்து
துவலை நிமிர்ந்து வானணவ,
கல்லால் கடலை யடைத்தானூர்
கண்ண புரம்நாம் தொழுதுமே. 8.6.4
Summary
Parting mighty ocean with arrows shot from his bow that spot hell-fire, He made the monkey clan build bridge on ocean to cross into Lanka Straight. Throwing mighty logs into ocean raising a splash of water high, Then with stones he made the bridge, now kannapuram O, let us worship!
பெரிய திருமொழி.755
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1702
பாசுரம்
ஆமை யாகி அரியாகி
அன்ன மாகி அந்தணர்தம்
ஓம மாகி ஊழியாய்
உலகு சூழ்ந்த நெடும்புணரி
சேம மதிள்சூழிலங்கைக்கோன்
சிரமுங்கரமும் துணித்து முன்
காமற் பயந்தான் கருதுமூர்
கண்ண புரம்நாம் தொழுதுமே. 8.6.5
Summary
O Hearth! The Lord who came in the yore as a furtile, a man-lion, and a swan, is the Lord of the vedic fire sacrifice and the four yugas; he crossed over into the oean-girdled Lanka city and cut as under the heads and arms of the mighty Rakshasa king; he is the father of Madana, and resident of kannapuram. Come let us worship.
பெரிய திருமொழி.756
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1703
பாசுரம்
வருந்தா திருநீ மடநெஞ்சே
நம்மேல் வினைகள் வாரா முன்
திருந்தா அரக்கர் தென்னிலங்கை
செந்தீ யுண்ணச் சிவந்தொருநாள்,
பெருந்தோள் வாணற் கருள்புரிந்து
பின்னை மணாள னாகி முன்
கருந்தாள் களிறொன் றொசித்தானூர்
கண்ண புரம்நாம் தொழுதுமே. 8.6.6
Summary
Despair not, O Frail Heart, no karmic harm con come over us. Then in the yore he burnt Lanka city with fire arrows from his mighty bow. He showed his grace upon Bana, married the good dame Nappinnai. He smote the elephant, bore first, lives in kannapuram, O, let us worship!