Responsive image

Songs

பெரிய திருமொழி.739

பாசுர எண்: 1686

பாசுரம்
நந்தன் மதலை நிலமங்கை நல்துணைவன்,
அந்த முதல்வன் அமரர்கள் தம்பெருமான்,
கந்தம் கமழ்காயா வண்ணன் கதிர்முடிமேல்,
கொந்து நறுந்துழாய் கொண்டூதாய் கோல்தும்பீ. 8.4.9

பெரிய திருமொழி.74

பாசுர எண்: 1021

பாசுரம்
பார்த்தற்காயன்றுபாரதம்கைசெய்திட்டு வென்றபரஞ்சுடர்,
கோத்தங்காயர் தம்பாடியில் குரவைபிணைந்தவெங்கோவலன்,
ஏத்துவார்த்தம்மனத்துள்ளான் இடவெந்தைமேவியவெம்பிரான்
தீர்த்தநீர்த்தடஞ்சோலைசூழ் திருவேங்கடமடைநெஞ்சமே. 1.8.4

Summary

The radiant Lord fought a victorious war for Arjuna. He is. The cowherd Lord Gopala who danced the Rasa with the Gopis. He resides in ldavendai and in the hearts of those who worship Him, and amid groves and holy springs in Tiruvenkatam,-thitherward, O Heart!

பெரிய திருமொழி.740

பாசுர எண்: 1687

பாசுரம்
வண்டமருஞ் சோலை வயலாலி நன்னாடன்,
கண்டசீர் வென்றிக் கலிய னொலிமாலை,
கொண்டல் நிறவண்ணன் கண்ண புரத்தானை,
தொண்டரோம் பாட நினைந்தூதாய் கோல்தும்பீ. (2) 8.4.10

பெரிய திருமொழி.741

பாசுர எண்: 1688

பாசுரம்
தந்தை காலில் விலங்கறவந்து
தோன்றிய தோன்றல்பின், தமியேன்றன்
சிந்தை போயிற்றுத் திருவருள்
அவனிடைப் பெறுமள விருந்தேனை,
அந்தி காவலனமுதுறு
பசுங்கதி ரவைசுட அதனோடும்,
மந்த மாருதம் வனமுலை
தடவந்து வலிசெய்வ தொழியாதே. (2) 8.5.1

பெரிய திருமொழி.742

பாசுர எண்: 1689

பாசுரம்
மாரி மாக்கடல் வளைவணற்
கிளையவன் வரைபுரை திருமார்பில்,
தாரி னாசையில் போயின
நெஞ்சமும் தாழ்ந்ததோர் துணைகாணேன்,
ஊரும் துஞ்சிற்றுலகமும்
துயின்றது ஒளியவன் விசும்பியங்கும்,
தேரும் போயிற்றுத் திசைகளும்
மறைந்தன செய்வதொன் றறியேனே. 8.5.2

பெரிய திருமொழி.743

பாசுர எண்: 1690

பாசுரம்
ஆயன் மாயமே யன்றிமற்
றென்கையில் வளைகளும் இறைநில்லா,
பேயின் ஆருயி ருண்டிடும்
பிள்ளைநம் பெண்ணுயிர்க் கிரங்குமோ,
தூய மாமதிக் கதிர்ச்சுடத்
துணையில்லை இணைமுலை வேகின்றதால்,
ஆயன் வேயினுக் கழிகின்ற
துள்ளமும் அஞ்சேலென் பாரிலையே. 8.5.3

பெரிய திருமொழி.744

பாசுர எண்: 1691

பாசுரம்
கயங்கொள் புண்தலைக் களிறுந்து
வெந்திறல் கழல்மன்னர் பெரும்போரில்,
மயஙகவெண்சங்கம் வாய்வைத்த
மைந்தனும் வந்திலன், மறிகடல்நீர்
தயங்கு வெண்திரைத் திவலைநுண்
பனியென்னும் தழல்முகந் திளமுலைமேல்,
இயங்கு மாருதம் விலங்கிலென்
ஆவியை எனக்கெனப் பெறலாமே. 8.5.4

பெரிய திருமொழி.745

பாசுர எண்: 1692

பாசுரம்
ஏழு மாமரம் துளைபடச்
சிலைவளைத் திலங்கையை மலங்குவித்த
ஆழி யான்,நமக் கருளிய
அருளொடும் பகலெல்லை கழிகின்றதால்,
தோழி. நாமிதற் கென்செய்தும்
துணையில்லை சுடர்படு முதுநீரில்,
ஆழ ஆழ்கின்ற ஆவியை
அடுவதோர் அந்திவந் தடைகின்றதே. 8.5.5

பெரிய திருமொழி.746

பாசுர எண்: 1693

பாசுரம்
முரியும் வெண்டிரை முதுகயம்
தீப்பட முழங்கழ லெரியம்பின்,
வரிகொள் வெஞ்சிலை வளைவித்த
மைந்தனும் வந்திலன் என்செய்கேன்,
எரியும் வெங்கதிர் துயின்றது
பாவியேன் இணைநெடுங் கண்துயிலா,
கரிய நாழிகை ஊ ழியில்
பெரியன கழியுமா றறியேனே. 8.5.6

பெரிய திருமொழி.747

பாசுர எண்: 1694

பாசுரம்
கலங்க மாக்கடல் கடைந்தடைத்
திலங்கையர் கோனது வரையாகம்,
மலங்க வெஞ்சமத் தடுசரம்
துரந்தவெம் மடிகளும் வாரானால்,
இலங்கு வெங்கதி ரிளமதி
யதனொடும் விடைமணி யடும்,ஆயன்
விலங்கல் வேயின தோசையு
மாயினி விளைவதொன் றறியேனே. 8.5.7

Enter a number between 1 and 4000.