Songs
பெரிய திருமொழி.702
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1649
பாசுரம்
செருவரைமுன் னாசறுத்த சிலையன்றோ
கைத்தலத்த தென்கின் றாளால்,
பொருவரைமுன் போர்தொலைத்த பொன்னாழி
மற்றொருகை என்கின் றாளால்,
ஒருவரையும் நின்னொப்பா ரொப்பிலர்
என்னப்பா என்கின் றாளால்,
கருவரைபோல் நின்றானைக் கண்ணபுரத்
தம்மானைக் கண்டாள் கொல்லோ. (2) 8.1.2
பெரிய திருமொழி.703
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1650
பாசுரம்
துன்னுமா மணிமுடிமேல் துழாயலங்கல்
தோன்றுமால் என்கின் றாளால்,
மின்னுமா மணிமகர குண்டலங்கள்
வில்வீசும் என்கின் றாளால்,
பொன்னின்மா மணியாரம் அணியாகத்
திலங்குமால் என்கின் றாளால்,
கன்னிமா மதிள்புடைசூழ் கண்ணபுரத்
தம்மானைக் கண்டாள் கொல்லோ. 8.1.3
பெரிய திருமொழி.704
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1651
பாசுரம்
தாராய தண்டுளப வண்டுழுத
வரைமார்பன் என்கின் றாளால்,
போரானைக் கொம்பொசித்த புட்பாகன்
என்னம்மான் என்கின் றாளால்,
ஆரானும் காண்மின்கள் அம்பவளம்
வாயவனுக் கென்கின் றாளால்,
கார்வானம் நின்றதிருக் கண்ணபுரத்
தம்மானைக் கண்டாள் கொல்லோ. 8.1.4
பெரிய திருமொழி.705
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1652
பாசுரம்
அடித்தலமும் தாமரையே அங்கையும்
பங்கயமே என்கின் றாளால்,
முடித்தலமும் பொற்பூணு மென்நெஞ்சத்
துள்ளகலா என்கின் றாளால்,
வடித்தடங்கண் மலரவளோ வரையாகத்
துள்ளிருப்பாள் என்கின் றாளால்,
கடிக்கமலம் கள்ளுகுக்கும் கண்ணபுரத்
தம்மானைக் கண்டாள் கொல்லோ. 8.1.5
பெரிய திருமொழி.706
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1653
பாசுரம்
பேரா யிரமுடைய பேராளன்
பேராளன் என்கின் றாளால்,
ஏரார் கனமகர குண்டலத்தன்
எண்தோளன் என்கின் றாளால்,
நீரார் மழைமுகிலே நீள்வரையே
ஒக்குமால் என்கின் றாளால்,
காரார் வயலமரும் கண்ணபுரத்
தம்மானைக் கண்டாள் கொல்லோ. 8.1.6
பெரிய திருமொழி.707
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1654
பாசுரம்
செவ்வரத்த வுடையாடை யதன்மேலோர்
சிவளிகைக்கச் சென்கின் றாளால்,
அவ்வரத்த வடியிணையு மங்கைகளும்
பங்கயமே என்கின் றாளால்,
மைவளர்க்கும் மணியுருவம் மரகதமோ
மழைமுகிலோ என்கின் றாளால்,
கைவளர்க்கு மழலாளர் கண்ணபுரத்
தம்மானைக் கண்டாள் கொல்லோ. 8.1.7
பெரிய திருமொழி.708
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1655
பாசுரம்
கொற்றப்புள் ளொன்றேறி மன்னூடே
வருகின்றான் என்கின் றாளால்,
வெற்றிப்போ ரிந்திரற்கு மிந்திரனே
ஒக்குமால் என்கின் றாளால்,
பெற்றக்கா லவனாகம் பெண்பிறந்தோம்
உய்யோமோ என்கின் றாளால்,
கற்றநூல் மறையாளர் கண்ணபுரத்
தம்மானைக் கண்டாள் கொல்லோ. 8.1.8
பெரிய திருமொழி.709
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1656
பாசுரம்
வண்டமரும் வனமாலை மணிமுடிமேல்
மணநாறும் என்கின் றாளால்,
உண்டிவர்பா லன்பெனக்கென் றொருகாலும்
பிரிகிலேன் என்கின் றாளால்,
பண்டிவரைக் கண்டறிவ தெவ்வூரில்
யாம் என்றே பயில்கின் றாளால்,
கண்டவர்தம் மனம்வழங்கும் கண்ணபுரத்
தம்மானைக் கண்டாள் கொல்லோ. 8.1.9
பெரிய திருமொழி.71
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1018
பாசுரம்
கொங்கலர்ந்தமலர்க்குருந்தமொசித்த கோவலனெம்பிரான்,
சங்குதங்குதடங்கடல்துயில்கொண்ட தாமரைக்கண்ணினன்,
பொங்குபுள்ளினைவாய்பிளந்த புராணர்த்தம்மிடம், பொங்குநீர்ச்
செங்கயல்திளைக்கும்சுனைத் திருவேங்கடமடை நெஞ்சமே. 1.8.1
Summary
My Lord Gopala who broke the fragrant blossoming Kurundu tree, my lotus-eyed Lord who reclines in the conch-filled ocean-deep, my Lord of the Puranas who ripped the jaws of the demon horse Kesin,- He resides amid tanks brimming with fish; in Tiruvenkatam, thitherward, O Heart!
பெரிய திருமொழி.710
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1657
பாசுரம்
மாவளரு மென்னோக்கி மாதராள்
மாயவனைக் கண்டாள் என்று,
காவளரும் கடிபொழில்சூழ் கண்ணபுரத்
தம்மானைக் கலியன் சொன்ன,
பாவளரும் தமிழ்மாலை பன்னியநூல்
இவையைந்து மைந்தும் வல்லார்,
பூவளரும் கற்பகம்சேர் பொன்னுலகில்
மன்னவராய்ப் புகழ்தக் கோரே. (2) 8.1.10