Responsive image

Songs

பெரிய திருமொழி.667

பாசுர எண்: 1614

பாசுரம்
கறுத்துக் கஞ்சனை யஞ்ச முனிந்தாய்.
கார்வண் ணா.கடல் போல் ஒளி வண்ணா
இறுத்திட் டான்விடை யேழும்முன் வென்றாய்
எந்தாய். அந்தர மேழுமு னானாய்,
பொறுத்துக் கொண்டிருந் தால்பொறுக் கொணாப்
போக மேநுகர் வான்புகுந்து, ஐவர்
அறுத்துத் தின்றிட வஞ்சிநின் னடைந்தேன்
அழுந்தூர் மேல்திசை நின்றவம் மானே. 7.7.7

பெரிய திருமொழி.668

பாசுர எண்: 1615

பாசுரம்
நெடியா னே.கடி ஆர்கலி நம்பீ.
நின்னை யேநினைந் திங்கிருப் பேனை,
கடியார் காளைய ரைவர் புகுந்து
காவல் செய்தவக் காவலைப் பிழைத்து
குடிபோந் துன்னடிக் கீழ்வந்து புகுந்தேன்
கூறை சோறிவை தந்தெனக் கருளி,
அடியே னைப்பணி யாண்டுகொ ளெந்தாய்.
அழுந்தூர் மேல்திசை நின்றவம் மானே. 7.7.8

பெரிய திருமொழி.669

பாசுர எண்: 1616

பாசுரம்
கோவாய் ஐவரென் மெய்குடி யேறிக்
கூறை சோறிவை தா என்று குமைத்துப்
போகார், நானவ ரைப்பொறுக் ககிலேன்
புனிதா. புட்கொடி யாய்.நெடு மாலே,
தீவாய் நாகணை யில்துயில் வானே.
திருமா லே.இனிச் செய்வதொன் றறியேன்,
ஆவா வென்றடி யேற்கிறை யிரங்காய்
அழுந்தூர் மேல்திசை நின்றவம் மானே. 7.7.9

பெரிய திருமொழி.67

பாசுர எண்: 1014

பாசுரம்
முனைத்தசீற்றம்விண்சுடப்போய் மூவுலகும்பிறவும்,
அனைத்துமஞ்சவாளரியாய் இருந்தவம்மானதிடம்,
கனைத்ததீயும்கல்லுமல்லா வில்லுடைவேடருமாய்,
தினைத்தனையும்செல்லவொண்ணாச் சிங்கவேள்குன்றமே. 1.7.7

Summary

The rage of the man-lion reaching the sky, the three worlds and all else stood in fear. His abode is Singavel-Kundram where fire; rocks and bow wielding hunters make it impossible to reach the temple.

பெரிய திருமொழி.670

பாசுர எண்: 1617

பாசுரம்
அன்ன மன்னுபைம் பூம்பொழில் சூழ்ந்த
அழுந்தூர் மேல்திசை நின்றவம் மானை,
கன்னி மன்னுதிண் டோள்கலி கன்றி
ஆலி நாடன்மங் கைக்குல வேந்தன்,
சொன்ன இன்தமிழ் நன்மணிக் கோவை
தூய மாலை யிவைபத்தும் வல்லார்,
மன்னி மன்னவ ராயுல காண்டு
மான வெண்குடைக் கீழ்மகிழ் வாரே. (2) 7.7.10

பெரிய திருமொழி.671

பாசுர எண்: 1618

பாசுரம்
செங்கமலத் திருமகளும் புவியும் செம்பொன்
திருவடியி னிணைவருட முனிவ ரேத்த,
வங்கமலி தடங்கடலுள் அனந்த னென்னும்
வரியரவி னணைத்துயின்ற மாயோன் காண்மின்,
எங்குமலி நிறைபுகழ்நால் வேதம் ஐந்து
வேள்விகளும் கேள்விகளும் இயன்ற தன்மை
அங்கமலத் தயனனையார் பயிலும் செல்வத்
தணியழுந்தூர் நின்றுகந்த அமரர் கோவே. (2) 7.8.1

பெரிய திருமொழி.672

பாசுர எண்: 1619

பாசுரம்
முன்னிவ்வுல கேழுமிருள் மண்டி யுண்ண
முனிவரொடு தானவர்கள் திகைப்ப, வந்து
பன்னுகலை நால்வேதப் பொருளை யெல்லாம்
பரிமுகமா யருளியவெம் பரமன் காண்மின்,
செந்நெல்மலி கதிர்க்கவரி வீசச் சங்கம்
அவைமுரலச் செங்கமல மலரை யேறி,
அன்னமலி பெடையோடும் அமரும் செல்வத்
தணியழுந்தூர் நின்றுகந்த அமரர் கோவே 7.8.2

பெரிய திருமொழி.673

பாசுர எண்: 1620

பாசுரம்
குலத்தலைய மதவேழம் பொய்கை புக்குக்
கோள்முதலை பிடிக்க அதற் கனுங்கி நின்று,
நிலத்திகழும் மலர்ச்சுடரேய் சோதீ. என்ன
நெஞ்சிடர்தீர்த் தருளியவென் நிமலன் காண்மின்,
மலைத்திகழ்சந் தகில்கனக மணியும் கொண்டு
வந்துந்தி வயல்கள்தொறும் மடைகள் பாய,
அலைத்துவரும் பொன்னிவளம் பெருகும் செல்வத்
தணியழுந்தூர் நின்றுகந்த அமரர் கோவே 7.8.3

பெரிய திருமொழி.674

பாசுர எண்: 1621

பாசுரம்
சிலம்புமுதல் கலனணிந்தோர் செங்கண் குன்றம்
திகழ்ந்ததெனத் திருவுருவம் பன்றி யாகி,
இலங்குபுவி மடந்தைதனை யிடந்து புல்கி
எயிற்றிடைவைத் தருளியவெம் மீசன் காண்மின்,
புலம்புசிறை வண்டொலிப்பப் பூகம் தொக்க
பொழில்கடொறும் குயில்கூவ மயில்க ளால
அலம்புதிரைப் புனல்புடைசூழ்ந் தழகார் செல்வத்
தணியழுந்தூர் நின்றுகந்த அமரர் கோவே 7.8.4

பெரிய திருமொழி.675

பாசுர எண்: 1622

பாசுரம்
சினமேவும் அடலரியி னுருவ மாகித்
திறல்மேவு மிரணியன் தாகம் கீண்டு,
மனமேவு வஞ்சனையால் வந்த பேய்ச்சி
மாளவுயிர் வவ்வியவெம் மாயோன் காண்மின்,
இனமேவு வரிவளக்கை யேந்தும் கோவை
ஏய்வாய மரகதம்போல் கிளியி னின்சொல்,
அனமேவு நடைமடவார் பயிலும் செல்வத்
தணியழுந்தூர் நின்றுகந்த அமரர் கோவே 7.8.5

Enter a number between 1 and 4000.