Responsive image

Songs

பெரிய திருமொழி.658

பாசுர எண்: 1605

பாசுரம்
நிலையா ளாகவென்னை யுகந்தானை, நிலமகள்தன்
முலையாள் வித்தகனை முதுநான்மறை வீதிதொறும்,
அலையா ரும்கடல்போல் முழங்கழுந்தையில் மன்னிநின்ற
கலையார் சொற்பொருளைக் கண்டுகொண்டு களித்தேனே 7.6.8

பெரிய திருமொழி.659

பாசுர எண்: 1606

பாசுரம்
பேரா னைக்குடந்தைப் பெருமானை, இலங்கொளிசேர்
வாரார் வனமுலையாள் மலர்மங்கை நாயகனை,
ஆரா வின்னமுதைத் தென்னழுந்தையில் மன்னிநின்ற,
காரார் கருமுகிலைக் கண்டுகொண்டு களித்தேனே. (2) 7.6.9

பெரிய திருமொழி.66

பாசுர எண்: 1013

பாசுரம்
எரிந்தபைங்கணிலங்குபேழ்வாய் எயிற்றொடிதெவ்வுருவென்று,
இரிந்துவானோர் கலங்கியோட இருந்தவம்மானதிடம்,
நெரிந்தவேயின் முழையுள்நின்று நீணெறிவாயுழுவை,
திரிந்தவானைச்சுவடுபார்க்கும் சிங்கவேள்குன்றமே. 1.7.6

Summary

Seeing the burning red eyes, bright wide gaping mouth and sharp bright teeth, the celestials ran helter-skelter, wondering,”What farin is this?” The Lord resides in Singavel-Kundram where tigers peer through Bamboo thickets looking for signs to the way the elephants went grazing.

பெரிய திருமொழி.660

பாசுர எண்: 1607

பாசுரம்
திறல்முரு கனனையார் தென்னழுந்தையில் மன்னிநின்ற
அறமுதல் வனவனை அணியாலியர் கோன்,மருவார்
கறைநெடு வேல்வலவன் கலிகன்றிசொல் ஐயிரண்டும்,
முறைவழு வாமைவல்லார் முழுதாள்வர் வானுலகே. (2) 7.6.10

பெரிய திருமொழி.661

பாசுர எண்: 1608

பாசுரம்
திருவுக் கும்திரு வாகிய செல்வா.
தெய்வத் துக்கர சே.செய்ய கண்ணா,
உருவச் செஞ்சுட ராழிவல் லானே.
உலகுண் டவொரு வா.திரு மார்பா,
ஒருவற் காற்றியுய் யும்வகை யென்றால்
உடனின் றைவரென் னுள்புகுந்து, ஒழியா
தருவித் தின்றிட அஞ்சிநின் னடைந்தேன்
அழுந்தூர் மேல்திசை நின்றவம் மானே. (2) 7.7.1

பெரிய திருமொழி.662

பாசுர எண்: 1609

பாசுரம்
பந்தார் மெல்விரல் நல்வளைத் தோளி
பாவை பூமகள் தன்னொடு முடனே
வந்தாய், என்மனத் தேமன்னி நின்றாய்
மால்வண் ணா.மழை போலொளி வண்ணா,
சந்தோ கா.பௌழி யா.தைத் திரியா.
சாம வேதிய னே.நெடு மாலே,
அந்தோ. நின்னடி யன்றிமற் றறியேன்
அழுந்தூர் மேல்திசை நின்றவம் மானே. 7.7.2

பெரிய திருமொழி.663

பாசுர எண்: 1610

பாசுரம்
நெய்யா ராழியும் சங்கமு மேந்தும்
நீண்ட தோளுடை யாய்,அடி யேனைச்
செய்யா தவுல கத்திடைச் செய்தாய்
சிறுமைக் கும்பெரு மைக்குமுள் புகுந்து,
பொய்யா லைவரென் மெய்குடி யேறிப்
போற்றி வாழ்வதற் கஞ்சிநின் னடைந்தேன்
ஐயா. நின்னடி யன்றிமற் றறியேன்
அழுந்தூர் மேல்திசை நின்றவம் மானே. 7.7.3

பெரிய திருமொழி.664

பாசுர எண்: 1611

பாசுரம்
பரனே. பஞ்சவன் பௌழியன் சோழன்
பார்மன் னர்மன்னர் தாம்பணிந் தேத்தும்
வரனே, மாதவ னே.மது சூதா.
மற்றோர் நல்துணை நின்னலா லிலேன்காண்
நரனே. நாரண னே.திரு நறையூர்
நம்பீ. எம்பெரு மான்.உம்ப ராளும்
அரனே, ஆதிவ ராகமுன் னானாய்.
அழுந்தூர் மேல்திசை நின்றவம் மானே. 7.7.4

பெரிய திருமொழி.665

பாசுர எண்: 1612

பாசுரம்
விண்டான் விண்புக வெஞ்சமத் தரியாய்ப்
பரியோன் மார்வகம் பற்றிப் பிளந்து,
பண்டான் உய்யவோர் மால்வரை யேந்தும்
பண்பா ளா.பர னே.பவித் திரனே,
கண்டேன் நான்கலி யுகத்ததன் தன்மை
கரும மாவது மென்றனக் கறிந்தேன்,
அண்டா. நின்னடி யன்றிமற் றறியேன்
அழுந்தூர் மேல்திசை நின்றவம் மானே. 7.7.5

பெரிய திருமொழி.666

பாசுர எண்: 1613

பாசுரம்
தோயா வின்தயிர் நெய்யமு துண்ணச்
சொன்னார் சொல்லி நகும்பரி சே,பெற்ற
தாயா லாப்புண்டி ருந்தழு தேங்கும்
தாடா ளா.தரை யோர்க்கும்விண் ணோர்க்கும்
சேயாய், கிரேத திரேத துவாபர
கலியு கமிவை நான்குமு னானாய்,
ஆயா. நின்னடி யன்றிமற் றறியேன்
அழுந்தூர் மேல்திசை நின்றவம் மானே. 7.7.6

Enter a number between 1 and 4000.