Songs
பெரிய திருமொழி.649
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1596
பாசுரம்
என்னைம் புலனு மெழிலுங்கொண்
டிங்கே நெருந லெழுந்தருளி
பொன்னங் கலைகள் மெலிவெய்தப்
போன புனித ரூர்போலும்,
மன்னு முதுநீ ரரவிந்த
மலர்மேல் வரிவண் டிசைபாட
அன்னம் பெடையோ டுடனாடும்
அணியார் வயல்சூழ் அழுந்தூரே 7.5.9
பெரிய திருமொழி.65
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1012
பாசுரம்
மென்றபேழ்வாய் வாளெயிற்றோர்க்கோளரியாய், அவுணன்
பொன்றவாகம்வள்ளுகிரால் போழ்ந்தபுனிதனிடம்,
நின்றசெந்தீமொண்டுசூறை நீள்விசும்பூடிரிய,
சென்றுகாண்டற்கரியகோயில் சிங்கவேள்குன்றமே. 1.7.5
Summary
With a tearing big mouth and dagger like teeth, a powerful; man lion fore the wide chest at the Asura Hiranya. His holy abode is Singavel-Kundram where whirlwinds carry blazing forest fires high into the sky making the temple difficult to reach.
பெரிய திருமொழி.650
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1597
பாசுரம்
நெல்லில் குவளை கண்காட்ட
நீரில் குமுதம் வாய்காட்ட,
அல்லிக் கமலம் முகங்காட்டும்
கழனி யழுந்தூர் நின்றானை,
வல்லிப் பொதும்பில் குயில்கூவும்
மங்கை வேந்தன் பரகாலன்,
சொல்லில் பொலிந்த தமிழ்மாலை
சொல்லப் பாவம் நில்லாவே. (2) 7.5.10
பெரிய திருமொழி.651
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1598
பாசுரம்
சிங்கம தாயவுணன் திறலாகம்முன் கீண்டுகந்த,
சங்கமி டத்தானைத் தழலாழி வலத்தானை,
செங்கமலத் தயனனையார் தென்னழுந்தையில் மன்னிநின்ற,
அங்கம லக்கண்ணனை அடியேன்கண்டு கொண்டேனே. (2) 7.6.1
பெரிய திருமொழி.652
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1599
பாசுரம்
கோவா னார்மடியக் கொலையார்மழுக் கொண்டருளும்,
மூவா வானவனை முழுநீர்வண் ணனை,அடியார்க்கு,
ஆவா என்றிரங்கித் தென்னழுந்தையில் மன்னிநின்ற,
தேவாதி தேவனையான் கண்டுகொண்டு திளைத்தேனே 7.6.2
பெரிய திருமொழி.653
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1600
பாசுரம்
உடையா னையொலிநீ ருலகங்கள் படைத்தானை,
விடையா னோடவன்று விறலாழி விசைத்தானை,
அடையார் தென்னிலங்கை யழித்தானை அணியழுந்தூர்
உடையானை, அடியே னடைந்துய்ந்து போனேனே 7.6.3
பெரிய திருமொழி.654
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1601
பாசுரம்
குன்றால் மாரிதடுத் தவனைக்குல வேழமன்று
பொன்றா மை,அதனுக் கருள்செய்த போரேற்றை,
அன்றா வின்நறுநெய் யமர்ந்துண்ண அணியழுந்தூர்
நின்றா னை,அடியேன் கண்டுகொண்டு நிறைந்தேனே 7.6.4
பெரிய திருமொழி.655
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1602
பாசுரம்
கஞ்சனைக் காய்ந்தானைக் கண்ணமங்கையுள் நின்றானை,
வஞ்சனப் பேய்முலையூ டுயிர்வாய்மடுத் துண்டானை,
செஞ்சொல் நான்மறையோர் தென்னழுந்தையில் மன்னிநின்ற
அஞ்சனக் குன்றந்தன்னை யடியேன்கண்டு கொண்டேனே 7.6.5
பெரிய திருமொழி.656
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1603
பாசுரம்
பெரியானை யமரர் தலைவற்கும் பிரமனுக்கும்,
உரியானை யுகந்தா னவனுக்கு முணர்வதனுக்
கரியானை, அழுந்தூர் மறையோர்க ளடிபணியும்
கரியானை, அடியேன் கண்டுகொண்டு களித்தேனே 7.6.6
பெரிய திருமொழி.657
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1604
பாசுரம்
திருவாழ் மார்வன்றன்னைத் திசைமண்ணீ ரெரிமுதலா,
உருவாய் நின்றவனை யொலிசேரும் மாருதத்தை,
அருவாய் நின்றவனைத் தென்னழுந்தையில் மன்னிநின்ற
கருவார் கற்பகத்தைக் கண்டுகொண்டு களித்தேனே 7.6.7