Responsive image

Songs

பெரிய திருமொழி.603

பாசுர எண்: 1550

பாசுரம்
தாரேன் பிறர்க்குன் னருளென் னிடைவைத்தாய்,
ஆரே னதுவே பருகிக் களிக்கின்றேன்,
காரேய் கடலே மலையே திருக்கோட்டி
யூரே, உகந்தா யையுகந் தடியேனே 7.1.3

பெரிய திருமொழி.604

பாசுர எண்: 1551

பாசுரம்
புள்வாய் பிளந்த புனிதா என் றழைக்க,
உள்ளேநின் றென்னுள்ளங் குளிரு மொருவா,
கள்வா கடன்மல்லைக் கிடந்த கரும்பே,
வள்ளால் உன்னை யெங்ஙனம்நான் மறக்கேனே 7.1.4

பெரிய திருமொழி.605

பாசுர எண்: 1552

பாசுரம்
வில்லேர் நுதல்வேல் நெடுங்கண் ணியும்நீயும்,
கல்லார் கடுங்கானம் திரிந்த களிறே,
நல்லாய் நரநா ரணனே எங்கள்நம்பி,
சொல்லா யுன்னையான் வணங்கித் தொழுமாறே 7.1.5

பெரிய திருமொழி.606

பாசுர எண்: 1553

பாசுரம்
பணியேய் பரங்குன்றின் பவளத் திரளே,
முனியே திருமூழிக் களத்து விளக்கே,
இனியாய் தொண்டரோம் பருகின் னமுதாய
கனியே உன்னைக்கண்டு கொண்டுய்ந் தொழிந்தேனே 7.1.6

பெரிய திருமொழி.607

பாசுர எண்: 1554

பாசுரம்
கதியே லில்லைநின் னருளல் லதெனக்கு,
நிதியே. திருநீர் மலைநித் திலத்தொத்தே,
பதியே பரவித் தொழும்தொண் டர்தமக்குக்
கதியே உனைக்கண்டு கொண்டுய்ந் தொழிந்தேனே 7.1.7

பெரிய திருமொழி.608

பாசுர எண்: 1555

பாசுரம்
அத்தா அரியே என்றுன் னையழைக்க,
பித்தா வென்று பேசுகின்றார் பிறரென்னை,
முத்தே மணிமா ணிக்கமே முளைக்கின்ற
வித்தே உன்னைஎங் ஙனம்னான் விடுகேனே. 7.1.8

பெரிய திருமொழி.609

பாசுர எண்: 1556

பாசுரம்
தூயாய். சுடர்மா மதிபோ லுயிர்க்கெல்லாம்,
தாயாய் அளிக்கின்ற தண்டா மரைக்கண்ணா,
ஆயா அலைநீ ருலகேழும் முன்னுண்ட
வாயா உனையெங் ஙனம்நான் மறக்கேனே 7.1.9

பெரிய திருமொழி.61

பாசுர எண்: 1008

பாசுரம்
அங்கண்ஞாலமஞ்ச அங்கோராளரியாய் அவுணன்
பொங்கவாகம்வள்ளுகிரால் போழ்ந்தபுனிதனிடம்,
பைங்கணானைக்கொம்புகொண்டு பத்திமையால், அடிக்கீழ்ச்
செங்கணாளியிட்டிறைஞ்சும் சிங்கவேள்குன்றமே. 1.7.1

Summary

Singavel-Kundram is the place where the pure Lord came as a man-lion,-while the world stood awe-struck,-and tore the Asura Hiranya’s chest with his claws. Red eyed lions offer worship by heaping elephant tusks at his feet with reverence.

பெரிய திருமொழி.610

பாசுர எண்: 1557

பாசுரம்
வண்டார் பொழில்சூழ் நறையூர்நம் பிக்கு,என்றும்
தொண்டாய்க் கலிய நொலிசெய் தமிழ்மாலை,
தொண்டீர் இவைபாடு மின்பாடி நின்றாட,
உண்டே விசும்பு உந்தமக்கில் லைதுயரே (2) 7.1.10

பெரிய திருமொழி.611

பாசுர எண்: 1558

பாசுரம்
புள்ளாய் ஏனமுமாய்ப்புகுந்து, என்னை யுள்ளங்கொண்ட
கள்வா என்றலும் என் கண்கள்நீர் சோர்தருமால்,
உள்ளே நின்றுருகி நெஞ்சமுன்னை யுள்ளியக்கால்,
நள்ளே னுன்னையல்லால் நறையூர்நின்ற நம்பீயோ. (2) 7.2.1

Enter a number between 1 and 4000.