Songs
பெரிய திருமொழி.568
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1515
பாசுரம்
பந்தார் விரலாள் பாஞ்சாலி
கூந்தல் முடிக்கப் பாரதத்து
கந்தார் களிற்றுக் கழல்மன்னர்
கலங்கச் சங்கம் வாய்வைத்தான்
செந்தா மரைமே லயனோடு
சிவனு மனைய பெருமையோர்
நந்தா வண்கை மறையோர் வாழ்
நறையூர் நின்ற நம்பியே (6.7.8)
பெரிய திருமொழி.569
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1516
பாசுரம்
ஆறும் பிறையும் அரவமும்
அடம்பும் சடைமே லணிந்து,உடலம்
நீறும் பூசி யேறூரும்
இறையோன் சென்று குறையிரப்ப
மாறொன் றில்லா வாசநீர்
வரைமார் வகலத் தளித்துகந்தான்
நாறும் பொழில்சூழ்ந் தழகாய
நறையூர் நின்ற நம்பியே (6.7.9)
பெரிய திருமொழி.57
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1004
பாசுரம்
நெஞ்சினால்,நினைந்தும்வாயினால்மொழிந்தும் நீதியல்லாதனசெய்தும்,
துஞ்சினார்செல்லுந்தொன்னெறிகேட்டே துளங்கினேன்விளங்கனிமுனிந்தாய்.,
வஞ்சனேடியேன்நெஞ்சினிற்பிரியா வானவா. தானவர்க்கென்றும்
நஞ்சனே., வந்துன்fதிருவடியடைந்தேன் நைமிசாரணியத்துளெந்தாய். 1.6.7
Summary
Thinking wickedly, speaking in harsh tones, doing many acts against Dharma, Trailing in the dreary path of the dead ones, I did tremble sinfully myself O! O Lord who felled the wood-apple-demon, ever-in-the-heart of devotees! O Death to Asuras, I have come to your feet Naimisaraniyam-living Lord, O!
பெரிய திருமொழி.570
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1517
பாசுரம்
நன்மை யுடைய மறையோர்வாழ்
நறையூர் நின்ற நம்பியை
கன்னி மதில்சூழ் வயல்மங்கைக்
கலிய னொலிசெய் தமிழ்மாலை
பன்னி யுலகில் பாடுவார்
பாடு சார பழவினைகள்
மன்னி யுலகம் ஆண்டுபோய்
வானோர் வணங்க வாழ்வாரே (6.7.10)
பெரிய திருமொழி.571
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1518
பாசுரம்
மான்கொண்ட தோல்மார்வில் மாணியாய், மாவலிமண்
தான்கொண்டு தாளால் அளந்த பெருமானை
தேன்கொண்ட சாரல் திருவேங் கடத்தானை
நான் சென்று நாடி நறையூரில் கண்டேனே (6.8.1)
பெரிய திருமொழி.572
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1519
பாசுரம்
முந்நீரை முன்னாள் கடைந்தானை மூழ்த்தநாள்
அந்நீரை மீனா யமைத்த பெருமானை
தென்னாலி மேய திருமாலை யெம்மானை
நன்னீர் வயல்சூழ் நறையூரில் கண்டே னே (6.8.2)
பெரிய திருமொழி.573
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1520
பாசுரம்
தூவாய புள்ளூர்ந்து, வந்து துறைவேழம்
மூவாமை நல்கி முதலை துணித்தானை
தேவாதி தேவனைச் செங்கமலக் கண்ணானை
நாவாயு ளானை நறையூரில் கண்டேனே (6.8.3)
பெரிய திருமொழி.574
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1521
பாசுரம்
ஓடாவரியாய் இரணியனை யூனிடந்த
சேடார் பொழில்சூழ் திருநீர் மலையானை
வாடா மலர்த்துழாய் மாலை முடியானை
நாடோறும் நாடி நறையூரில் கண்டேனே (6.8.4)
பெரிய திருமொழி.575
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1522
பாசுரம்
கல்லார் மதில்சூழ் கடியிலங்கைக் காரரக்கன்
வல்லாகங் கீள வரிவெஞ் சரம்துரந்த
வில்லானை, செல்வவிபீடணற்கு வேறாக
நல்லனை நாடி நறையூரில் கண்டேனே (6.8.5)
பெரிய திருமொழி.576
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1523
பாசுரம்
உம்பருலகோடு உயிரெல்லாம் உந்தியில்
வம்பு மலர்மேல் படைத்தானை மாயோனை
அம்பன்ன கண்ணாள் அசோதைதன் சிங்கத்தை
நம்பனை நாடி நறையூரில் கண்டேனே (6.8.6)