Songs
பெரிய திருமொழி.531
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1478
பாசுரம்
கண்ணும் சுழன்று பீளையோ
டீளைவந் தேங்கினால்,
பண்ணின் மொழியார் பைய
நடமின் என் னாதமுன்,
விண்ணும் மலையும் வேதமும்
வேள்வியு மாயினான்,
நண்ணு நறையூர் நாம்தொழு
தும்மெழு நெஞ்சமே (6.4.1)
பெரிய திருமொழி.532
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1479
பாசுரம்
கொங்குண் குழலார் கூடி
யிருந்து சிரித்து, நீர்
இங்கென்னிருமி யெம்பால்
வந்ததென் றிகழாதமுன்,
திங்க ளெரிகால் செஞ்சுட
ராயவன் தேசுடை
நங்கள் நறையூர் நாம்தொழு
தும்மெழு நெஞ்சமே (6.4.2)
பெரிய திருமொழி.533
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1480
பாசுரம்
கொங்கார் குழலார் கூடி
யிருந்து, சிரித்து, எம்மை
எங்கோலம் ஐயா என்னினிக்
காண்பதென் னாதமுன்
செங்கோல் வலவன் தான்பணிந்
தேத்தித் திகழுமூர்,
நங்கோன் நறையூர் நாம்தொழு
தும்மெழு நெஞ்சமே (6.4.3)
பெரிய திருமொழி.534
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1481
பாசுரம்
கொம்பும் அரவமும் வல்லியும்
வெண்றனுண் ணேரிடை,
வம்புண் குழலார் வாச
லடைத்திக ழாதமுன்,
செம்பொன் கமுகினந் தான்கனி
யும்செழுஞ் சோலைசூழ்
நம்பன் நறையூர் நாம்தொழு
தும்மெழு நெஞ்சமே (6.4.4)
பெரிய திருமொழி.535
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1482
பாசுரம்
விலங்கும் கயலும் வேலுமொண்
காவியும் வெண்றகண்
சலம்கொண்ட சொல்லார் தாங்கள்
சிரித்திக ழாதமுன்,
மலங்கும் வராலும் வாளையும்
பாய்வயல் சூழ்தரு,
நலங்கொள் நறையூர் நாம்தொழு
தும்மெழு நெஞ்சமே (6.4.5)
பெரிய திருமொழி.536
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1483
பாசுரம்
மின்னே ரிடையார் வேட்கையை
மாற்றி யிருந்து,
என்னீ ரிருமியெம் பால்வந்த
தென்றிக ழாதமுன்,
தொன்னீ ரிலங்கை மலங்க
இலங்கெரி யூட்டினான்,
நன்னீர் நறையூர் நாம்தொழு
தும்மெழு நெஞ்சமே (6.4.6)
பெரிய திருமொழி.537
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1484
பாசுரம்
வில்லேர் நுதலார் வேட்கையை
மாற்றிச் சிரித்து, இவன்
பொல்லான் திரைந்தான் என்னும்
புறனுரை கேட்பதன்முன்,
சொல்லார் மறைநான் கோதி
யுலகில் நிலாயவர்,
நல்லார் நறையூர் நாம்தொழு
தும்மெழு நெஞ்சமே (6.4.7)
பெரிய திருமொழி.538
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1485
பாசுரம்
வாளொண்கண் ணல்லார் தாங்கள்
மதனனென் றார்தம்மை,
கேளுமின் களீலையோடு ஏங்கு
கிழவன் என் னாதமுன்,
வேள்வும் விழவும் வீதியி
லென்று மறாதவூர்,
நாளு நறையூர் நாம்தொழு
தும்மெழு நெஞ்சமே (6.4.8)
பெரிய திருமொழி.539
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1486
பாசுரம்
கனிசேர்ந் திலங்குநல் வாயவர்
காதன்மை விட்டிட,
குனிசேர்ந் துடலம் கோலில்
த்ளர்ந்திளை யாதமுன்,
பனிசேர் விசும்பில் பான்மதி
கோள்விடுத் தானிடம்,
நனிசேர் நறையூர் நாம்தொழு
தும்மெழு நெஞ்சமே (6.4.9)
பெரிய திருமொழி.54
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1001
பாசுரம்
வம்புலாங்கூந்தல்மனைவியைத்துறந்து பிறர்ப்பொருள்தாரமென்றிவற்றை,
நம்பினாரிறந்தால்நமன் தமர்ப்பற்றி எற்றிவைத்து, எரியெழுகின்ற
செம்பினாலியன்றபாவையைப் பாவீ. தழுவெனமொழிவதர்க்கஞ்சி,
நம்பனே. வந்துந்திருவடியடைந்தேன் நைமிசாரணியத்துளெந்தாய். 1.6.4
Summary
Forsaking the faithful, other fond and loving wives, thoss who go after the others’ wives, when they do die and go to the other world, Yama’s agents garb and punish them, “Sinner, come and embrace this damsel made of sizzling red hot copper”, Fearing to hear these words, I have come to serve your feet, Naimisaraniyam-living Lord, O!