Songs
பெரிய திருமொழி.513
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1460
பாசுரம்
மானெய் நோக்கியர் தம்வயிற்
றுக்குழி யிலுழைக்கும்,
ஊனேராக்கை தன்னை உ<த
வாமை யுணர்ந்துணர்ந்து,
வானே மானில மே வந்து
வந்தென் மனத்திருந்த
தேனே, நின்னடைந் தேன்திரு
விண்ண்ணகர் மேயவனே (6.2.3)
பெரிய திருமொழி.514
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1461
பாசுரம்
பிறிந்தேன் பெற்றமக் கள்பெண்டி
ரென்றிவர் பின்னுதவா
தறிந்தேன் நீபணித் தவரு
ளென்னுமொள் வாளுருவி
எறிந்தேன் ஐம்புலன் கள்இடர்
தீர வெறிந்துவந்து
செறிந்தேன் நின்னடிக் கேதிரு
விண்ணகர் மேயவனே (6.2.4)
பெரிய திருமொழி.515
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1462
பாசுரம்
பாண்டேன் வண்டறை யும்குழ
லார்கள்பல் லாண்டிசைப்ப,
ஆண்டார் வையமெல் லாம் அர
சாகி, முன்னாண்டவரே
மாண்டா ரென்றுவந் தார்அந்
தோமனை வாழ்க்கைதன்னை
வேண்டேன், நின்னடைந் தேன்திரு
விண்ணகர் மேயவனே (6.2.5)
பெரிய திருமொழி.516
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1463
பாசுரம்
கல்லா வைம்புலன் களவை
கண்டவா செய்யகில்லேன்,
மல்லா, மல்லம ருள்மல்
லர்மாள மல்லடர்த்த
மல்லா, மல்லலம் சீர்மதிள்
நீரிலங் கையழித்த
வில்லா, நின்னடைந் தேன்திரு
விண்ணகர் மேயவனே (6.2.6)
பெரிய திருமொழி.517
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1464
பாசுரம்
வேறா யானிரந் தேன்வெகு
ளாது மனக்கொளந்தாய்,
ஆறா வெந்நர கத்தடி
யேனை யிடக்கருதி,
கூறா ஐவர்வந் துகுமைக்
கக்குடி விட்டவரை,
தேறா துன்னடைந் தேன்திரு
விண்ணகர் மேயவனே (6.2.7)
பெரிய திருமொழி.518
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1465
பாசுரம்
தீவாய் வல்வினை யாருட
னின்று சிறந்தவர்போல்,
மேவா வெந்நர கத்திட
உற்று விரைந்துவந்தார்,
மூவா வானவர் தம்முதல்
வா மதி கோள்விடுத்த
தேவா, நின்னடைந் தேன்திரு
விண்ணகர் மேயவனே (6.2.8)
பெரிய திருமொழி.519
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1466
பாசுரம்
போதார் தாமரை யாள்புல
விக்குல வானவர்தம்
கோதா, கோதில்செங் கோல்குடை
மன்ன ரிடைநடந்த
தூதா, தூமொழி யாய்.சுடர்
போலென் மனத்திருந்த
வேதா, நின்னடைந் தேன்திரு
விண்ணகர் மேயவனே (6.2.9)
பெரிய திருமொழி.52
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 999
பாசுரம்
சிலம்படியுருவிற்கருநெடுங்கண்ணார் திறத்தனாயறத்தயேமறந்து,
புலம்படிந்துண்ணும் போகமேபெருக்கிப் போக்கினேன் பொழுதினைவாளா,
அலம்புரிதடக்கையாயனேமாயா. வானவர்க்கரசனே., வானோர்
நலம்புரிந்திறைஞ்சுன்fதிருவடியடைந்தேன் நைமிசாரணியத்துளெந்தாய். 1.6. 2
Summary
Shapely wide-eyed dames wearing anklets drew mw making you and me forget Dharma, Senses suck and devour, giving pleasure for a while, — I spent all my times in this wasteful manner. O Wonder-cowherd-Lord, bearing a plough in hand, king of the celestial kings, O! Feet that is worshipped, by the Gods in sky above Naimisaraniyam-living Lord, O!
பெரிய திருமொழி.520
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1467
பாசுரம்
தேனார் பூம்புற வில்திரு
விண்ணகர் மேயவனை,
வானா ரும்மதில் சூழ்வயல்
மங்கையர் கோன், மருவார்
ஊனார் வேல்கலி யனொலி
செய்தமிழ் மாலைவல்லார்,
கோனாய் வானவர் தம்கொடி
மாநகர் கூடுவரே (6.2.10)
பெரிய திருமொழி.521
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1468
பாசுரம்
துறப்பேன் அல்லேனின் பம்துற
வாது, நின்னுருவம்
மறப்பே னல்லேனென் றும்மற
வாது, யானுலகில்
பிறப்பே னாகவெண் ணேன்பிற
வாமை பெற்றது, நின்
திறத்தே னாதன் மையால்
திருவிண் ணகரானே (6.3.1)