Songs
பெரிய திருமொழி.504
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1451
பாசுரம்
நிலவொடு வெயில்நில விருசுடரும்
உலகமு முயிர்களு முண்டொருகால்,
கலைதரு குழவியி னுருவினையாய்
அலைகட லாலிலை வளர்ந்தவனே.
ஆண்டாயுனைக் காண்பதோ
ரருளெனக் கருளுதியேல்,
வேண்டேன்மனை வாழ்க்கையை
விண்ணகர் மேயவனே (6.1.4)
பெரிய திருமொழி.505
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1452
பாசுரம்
பாரெழு கடலெழு மலையெழுமாய்ச்
சீர்கெழு மிவ்வுல கேழுமெல்லாம்,
ஆர்கெழு வயிற்றினி லடக்கி நின்று அங்
கோரெழுத் தோருரு வானவனே.
ஆண்டாயுனைக் காண்பதோ
ரருளெனக் கருளுதியேல்,
வேண்டேன்மனை வாழ்க்கையை
விண்ணகர் மேயவனே (6.1.5)
பெரிய திருமொழி.506
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1453
பாசுரம்
கார்கெழு கடல்களும் மலைகளுமாய்
ஏர்கெழு முலகமு மாகி,முத
லார்களு மறிவரு நிலையினையாய்ச்
சீர்கெழு நான்மறை யானவனே.
ஆண்டாயுனைக் காண்பதோ
ரருளெனக் கருளுதியேல்,
வேண்டேன்மனை வாழ்க்கையை
விண்ணகர் மேயவனே (6.1.6)
பெரிய திருமொழி.507
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1454
பாசுரம்
உருக்குறு நறுநெய்கொண் டாரழலில்
இறுக்குறு மந்தணர் சந்தியின்வாய்,
பெருக்கமொ டமரர்க ளமரநல்கும்
இருக்கினி லின்னிசை யானவனே.
ஆண்டாயுனைக் காண்பதோ
ரருளெனக் கருளுதியேல்,
வேண்டேன்மனை வாழ்க்கையை
விண்ணகர் மேயவனே (6.1.7)
பெரிய திருமொழி.508
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1455
பாசுரம்
காதல்செய் திளையவர் கலவிதரும்
வேதனை வினையது வெருவுதலாம்,
ஆதலி னுனதடி யணுகுவன் நான்.
போதலார் நெடுமுடிப் புண்ணியனே.
ஆண்டாயுனைக் காண்பதோ
ரருளெனக் கருளுதியேல்,
வேண்டேன்மனை வாழ்க்கையை
விண்ணகர் மேயவனே (6.1.8)
பெரிய திருமொழி.509
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1456
பாசுரம்
சாதலும் பிறத்தலு மென்றிவற்றைக்
காதல்செய் யாதுன கழலடைந்தேன்,
ஓதல்செய் நான்மறை யாகியும்பர்
ஆதல்செய் மூவுரு வானவனே.,
ஆண்டாய் உனைக் காண்பதோ
ரருளெனக் கருளுதியேல்
வேண்டேன்மனை வாழ்க்கையை
விண்ணகர் மேயவனே. (6.1.9)
பெரிய திருமொழி.51
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 998
பாசுரம்
வாணிலாமுறுவல்சிறுனுதல்பெருந்தோள் மாதரார்வனமுலைப்பயனே
பேணினேன், அதனைப்பிழையெனக்கருதிப் பேதையேன்பிறவிநோயறுப்பான்,
ஏணிலேனிருந்தேனெண்ணினேனெண்ணி இளையவர்க்கலவியிந்திறத்தை
நாணினேன், வந்துந்திருவடியடைந்தேன் நைமிசாரணியத்துளெந்தாய். 1.6.1
Summary
Mon-beam-like laughter, little-forehead slender-arms, beautiful breasts had beckoned me. Running after all this, I then saw the wrong I did, shamefully came to you for redemption. I had never thought of you, now I got to think of you, –memory of lurid dames receding, –Filled with remorse I came to your holy feet, Naimisaraniyam-living Lord, O!.
பெரிய திருமொழி.510
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1457
பாசுரம்
பூமரு பொழிலணி விண்ணகர்மேல்,
காமரு சீர்க்கலி கன்றிசொன்ன,
பாமரு தமிழிவை பாடவல்லார்,
வாமனன் அடியிணை மருவுவரே
(6.1.10)
பெரிய திருமொழி.511
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1458
பாசுரம்
பொறுத்தேன் புன்சொல்நெஞ் சில்பொரு
ளின்ப மெனவிரண்டும்
இறுத்தேன், ஐம்புலன் கட்கட
னாயின வாயிலொட்டி
அறுத்தேன், ஆர்வச்செற் றமவை
தன்னை மனத்தகற்றி
வெறுத்தேன், நின்னடைந் தேன்திரு
விண்ணகர் மேயவனே (6.2.1)
பெரிய திருமொழி.512
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1459
பாசுரம்
மறந்தே னுன்னைமுன்னம fமறந்
தமதி யின்மனத்தால்,
இறந்தே னெத்த னையுமத
னாலிடும் பைக்குழியில்
பிறந்தே யெய்த்தொழிந்
தேன்பெ ருமானே திருமார்பா
சிறந்தேன் நின்னடிக் கேதிரு
விண்ணகர் மேயவனே (6.2.2)