Responsive image

Songs

பெரிய திருமொழி.496

பாசுர எண்: 1443

பாசுரம்
தம்பியொடு தாமொருவர் தந்துணைவி காதல்துணை
யாக முனநாள்,
வெம்பியெரி கானகமு லாவுமவர் தாமினிது
மேவு நகர்தான்,
கொம்புகுதி கொண்டுகுயில் கூவமயி லாலும் எழி
லார்பு றவுசேர்,
நம்பியுறை கின்றநகர் நந்திபுர விண்ணகரம்
நண்ணு மனமே (5.10.6)

பெரிய திருமொழி.497

பாசுர எண்: 1444

பாசுரம்
தந்தைமன முந்துதுயர் நந்நஇருள் வந்தவிறல்
நந்தன் மதலை,
எந்தையிவ னென்றமரர் கந்தமலர் கொண்டுதொழ
நின்ற நகர்தான்,
மந்தமுழ வோசைமழை யாகவெழு கார்மயில்கள்
ஆடுபொழில்சூழ்,
நந்திபணி செய்தநகர் நந்திபுர விண்ணகரம்
நண்ணு மனமே (5.10.7)

பெரிய திருமொழி.498

பாசுர எண்: 1445

பாசுரம்
எண்ணில்நினை வெய்தியினி யில்லையிறை யென்றுமுனி
யாளர் திருவார்,
பண்ணில்மலி கீதமொடு பாடியவ ராடலொடு
கூட எழிலார்,
மண்ணிலிது போலநக ரில்லையென வானவர்கள்
தாம லர்கள்தூய்
நண்ணியுறை கின்றநகர் நந்திபுர விண்ணகரம்
நண்ணு மனமே (5.10.8)

பெரிய திருமொழி.499

பாசுர எண்: 1446

பாசுரம்
வங்கமலி பௌவமது மாமுகடி னுச்சிபுக
மிக்க பெருநீர்,
அங்கமழி யாரவன தாணைதலை சூடுமடி
யார றிதியேல்,
பொங்குபுன லுந்துமணி கங்குலிருள் சீறுமொளி
யெங்கு முளதால்,
நங்கள்பெரு மானுறையும் நந்திபுர விண்ணகரம்
நண்ணு மனமே (5.10.9)

பெரிய திருமொழி.5

பாசுர எண்: 952

பாசுரம்
கள்வனேனானேன்படிறுசெய்திருப்பேன்
கண்டவாதிரிதந்தேனேலும்,
தெள்ளியேனானேன்செல்கதிக்கமைந்தேன்
சிக்கெனத்திருவருள்பெற்றேன்,
உள்ளெலாமுருகிக்குரல் தழுத்தொழிந்தேன்
உடம்பெலாம்கண்ணநீர்சோர,
நள்ளிருளளவும் பகலும் நானழைப்பன்
நாராயணாவென்னும்நாமம்.      1.1.5

Summary

I was a tyrant, my ways were murky, I went about as I wished to. Yet I became clear, ready to be led, into a new life through God’s grace. I melted inside, my voice became soft, I was covered in my tears. All through the night and day I keep chanting, Narayana is the good name.

பெரிய திருமொழி.50

பாசுர எண்: 997

பாசுரம்
தாராவாரும்வயல்சூழ்ந்த சாளக்கிராமத்தடிகளை,
காரார்ப்புறவின்மங்கைவேந்தன் கலியனொலிசெய் தமிழ்மாலை,
ஆராருலகத்தறிவுடையார் அமரர்நன்னாட்டரசாள,
பேராயிரமுமோதுமிங்கள் அன்றியிவையேபிதற்றுமினே. 1.5.10

Summary

The dark-cloud-flavored Mangai’s King Kaliyan has sung these songs on the Lord who resides in Saligrama, surrounded by fields with water birds. O Wise people of the world! If you wish to rule the world of the eternals, chant the thousand names of the Lord. Or else, sing these songs like mad.

பெரிய திருமொழி.500

பாசுர எண்: 1447

பாசுரம்
நறைசெய் பொழில் மழைதவழும் நந்திபுர விண்ணகரம்
நண்ணி யுறையும்,
உறைகொள்புக ராழிசுரி சங்கமவை யங்கையுடை
யானை, ஒளிசேர்
கறைவளரும் வேல்வல்ல கலியனொலி மாலையிவை
யைந்து மைந்தும்,
முறையிலவை பயிலவல அடியவர்கள் கொடுவினைகள்
முழுத கலுமே (5.10.10)

பெரிய திருமொழி.501

பாசுர எண்: 1448

பாசுரம்
வண்டுணு நறுமல ரிண்டைகொண்டு
பண்டைநம் வினைகெட வென்று, அடிமேல்
தொண்டரு மமரும் பணியநின்று
அங்கண்டமொ டகலிட மளந்தவனே.
ஆண்டாயுனைக் கான்பதோ
ரருளெனக் கருளுதியேல்,
வேண்டேன்மனை வாழ்க்கையை
விண்ணகர் மேயவனே (6.1.1)

பெரிய திருமொழி.502

பாசுர எண்: 1449

பாசுரம்
அண்ணல்செய் தலைகடல் கடைந்ததனுள்
கண்ணுதல் நஞ்சுணக் கண்டவனே
விண்ணவ ரமுதுண அமுதில்வரும்
பெண்ணமு துண்டவெம் பெருமானே .
ஆண்டாயுனைக் காண்பதோ
ரருளெனக் கருளுதியேல்,
வேண்டேன்மனை வாழ்க்கையை
விண்ணகர் மேயவனே (6.1.2)

பெரிய திருமொழி.503

பாசுர எண்: 1450

பாசுரம்
குழல்நிற வண்ண நின் கூறுகொண்ட
தழல்நிற வண்ணன் நண் ணார்நகரம்
விழ, நனி மலைசிலை வளைவுசெய்துஅங்
கழல்நிற அம்பது வானவனே.
ஆண்டாயுன்னைக் காண்பதோ
ரருளெனக் கருளுதியேல்,
வேண்டேன்மனை வாழ்க்கையை
விண்ணகர் மேயவனே (6.1.3)

Enter a number between 1 and 4000.