Songs
பெரிய திருமொழி.487
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1434
பாசுரம்
வெண்ணெய்தா னமுது செய்ய
வெகுண்டுமத் தாய்ச்சி யோச்சி,
கண்ணியர் குறுங்க யிற்றால்
கட்டவெட் டென்றி ருந்தான்,
திண்ணமா மதிள்கள் சூழ்ந்த
தென்திருப் பேருள், வேலை
வண்ணனார் நாமம் நாளும்
வாய்மொழிந் துய்ந்த வாறே (5.9.7)
பெரிய திருமொழி.488
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1435
பாசுரம்
அம்பொனா ருலக மேழும்
அறியஆய்ப் பாடி தன்னுள்,
கொம்பனார் பின்னை கோலம்
கூடுதற் கேறு கொன்றான்,
செம்பொனார் மதிள்கள் சூழ்ந்த
தென்திருப் பேருள் மேவும்,
எம்பிரான் நாமம் நாளும்
ஏத்திநா னுய்ந்த வாறே (5.9.8)
பெரிய திருமொழி.489
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1436
பாசுரம்
நால்வகை வேத மைந்து
வேள்வியா றங்கம் வல்லார்,
மேலைவா னவரின் மிக்க
வேதிய ராதி காலம்,
சேலுகள் வயல்தி ருப்பேர்ச்
செங்கண்மா லோடும் வாழ்வார்,
சீலமா தவத்தர் சிந்தை
யாளியென் சிந்தை யானே (5.9.9)
பெரிய திருமொழி.49
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 996
பாசுரம்
தொண்டாமினமுமிமையோரும் துணைநுaல்மார்பினந்தணரும்,
அண்டாவெமக்கேயருளாயென்று அணயும்கோயிலருகெல்லாம்,
வண்டார்ப்பொழிலின்பழனத்து வயலினயலேகயல்பாய,
தண்டாமரைகள்முகமலர்த்தும் சாளக்கிராமமடைநெஞ்சே. 1.5.9
Summary
Bands of devotees, hordes of gods and batches of twin-thread-house-holder Vedic seers, seek the Lord’s grace and come to worship him in his temple surrounded by bee-humming groves and watered fields where Kaya-fish dances and lotus blooms raise their cheerful faces. Go to Him in Saligrama, O Heart!
பெரிய திருமொழி.490
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1437
பாசுரம்
வண்டறை பொழில்தி ருப்பேர்
வரியர வணையில் பள்ளி
கொண்டுறை கின்ற மாலைக்
கொடிமதிள் மாட மங்கை,
திண்டிறல் தோள்க லியன்
செஞ்சொலால் மொழிந்த மாலை,
கொண்டிவை பாடி யாடக்
கூடுவார் நீள்வி சும்பே (5.9.10)
பெரிய திருமொழி.491
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1438
பாசுரம்
தீதறுநி லத்தொடெரி காலினொடு நீர்க்கெழுவி
சும்பு மவையாய்,
மாசறும னத்தினொடு றக்கமொடி றக்கையவை
யாய பெருமான்,
தாய்செறவு ளைந்துதயி ருண்டுகுட மாடுதட
மார்வர் தகைசேர்,
நாதனுறை கின்றநகர் நந்திபுர விண்ணகரம்
நண்ணு மனமே (5.10.1)
பெரிய திருமொழி.492
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1439
பாசுரம்
உய்யும்வகை யுண்டுசொன செய்யிலுலக கேழுமொழி
யாமை முனநாள்,
மெய்யினள வேயமுது செய்யவல ஐயனவன்
மேவு நகர்தான்,
மையவரி வண்டுமது வுண்டுகிளை யோடுமலர்
கிண்டி யதன்மேல்,
நைவளம்ந விற்றுபொழில் நந்திபுர விண்ணகரம்
நண்ணு மனமே (5.10.2)
பெரிய திருமொழி.493
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1440
பாசுரம்
உம்பருல கேழுகட லேழுமலை யேழுமொழி
யாமை முனநாள்,
தம்பொன்வயி றாரளவு முண்டவையு மிழ்ந்ததட
மார்வர் தகைசேர்,
வம்புமலர் கின் றபொழில் பைம்பொன்வரு தும்பிமணி
கங்குல் வயல்சூழ்,
நம்பனுறை கின்றநகர் நந்திபுர விண்ணகரம்
நண்ணு மனமே (5.10.3)
பெரிய திருமொழி.494
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1441
பாசுரம்
பிறையினொளி யெயிறிலக முறுகியெதிர் பொருதுமென
வந்த அசுரர்
இறைகளவை நெறுநெறென வெறியவவர் வயிறழல
நின்ற பெருமான்,
சிறைகொள்மயில் குயில்பயில மலர்களுக அளிமுரல
அடிகொள் நெடுமா,
நறைசெய்பொழில் மழைதவழும் நந்திபுர விண்ணகரம்
நண்ணு மனமே (5.10.4)
பெரிய திருமொழி.495
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1442
பாசுரம்
மூளவெரி சிந்திமுனி வெய்தியமர் செய்துமென
வந்த அசுரர்,
தோளுமவர் தாளுமுடி யோடுபொடி யாகநொடி
யாம ளவெய்தான்,
வாளும்வரி வில்லும்வளை யாழிகதை சங்கமிவை
யங்கை யுடையான்,
நாளுமுறை கின்றநகர் நந்திபுர விண்ணகரம்
நண்ணு மனமே (5.10.5)