Responsive image

Songs

பெரிய திருமொழி.478

பாசுர எண்: 1425

பாசுரம்
வேத வாய்மொழி யந்தண னொருவன்
எந்தை நின்சர ணென்னுடை மனைவி,
காதல் மக்களைப் பயத்தலும் காணாள்
கடிய தோர் தெய்வங்கொண் டொளிக்கும், என்றழைப்ப
ஏத லார்முன்னே யின்னரு ளவர்க்குச்
செய்துன் மக்கள்மற் றிவரென்று கொடுத்தாய்,
ஆத லால்வந்துன் அடியிணை யடைந்தேன்
அணிபொ ழில்திரு வரங்கத்தம் மானே (5.8.8)

பெரிய திருமொழி.479

பாசுர எண்: 1426

பாசுரம்
துளங்கு நீண்முடி அரசர்தங்குரிசில்
தொண்டை மன்னவன் திண்டிற லொருவற்கு
உளங்கொ ளன்பினோ டின்னருள் சுரந்தங்
கோடு நாழிகை யேழுடனிருப்ப,
வளங்கொள் மந்திரம் மற்றவற் கருளிச்
செய்த வாறடி யேனறிந்து, உலகம்
அளந்த பொன்னடி யேயடைந் துய்ந்தேன்
அணிபொ ழில்திரு வரங்கத்தம் மானே (5.8.9)

பெரிய திருமொழி.48

பாசுர எண்: 995

பாசுரம்
வெந்தாரென்பும்சுடுநீறும் மெய்யில்பூசிக்கையகத்து, ஓர்
சந்தார் தலைகொண்டுலகேழும் திரியும்பெரியோந்தான்சென்று, என்
எந்தாய். சாபம்தீரென்ன இலங்கமுதநீர்த்திருமார்பில்
தந்தான், சந்தார்ப்பொழில்சூழ்ந்த சாளக்கிராமமடைநெஞ்சே. 1.5.8

Summary

God Siva smears himself with the ashes of cremated bodies and carries a hole-ridden skull, roaming the seven worlds. He went to our benevolent Lord and begged to be rid of the curse on him, whereupon the Lord filled the skull-bowl with the sap-of-his-heart blood. He resides amid Sandal groves. Go to Him in Saligrama, O Heart!

பெரிய திருமொழி.480

பாசுர எண்: 1427

பாசுரம்
மாடமாளிகை சூழ்திரு மங்கை
மன்னன் ஒன்னலர் தங்களை வெல்லும்,
ஆடல் மாவல் வன்கலி கன்றி
அணிபொ ழில்திரு வரங்கத்தம் மானை,
நீடு தொல்புக ழாழிவல் லானை
எந்தை யைநெடு மாலைநி னைந்த,
பாடல் பத்திவை பாடுமின் தொண்டீர்.
பாட நும்மிடைப் பாவம்நில் லாவே (5.8.10)

பெரிய திருமொழி.481

பாசுர எண்: 1428

பாசுரம்
கையிலங் காழி சங்கன்
கருமுகில் திருநி றத்தன்,
பொய்யிலன் மெய்யன் தந்தாள்
அடைவரே லடிமை யாக்கும்,
செய்யலர் கமல மோங்கு
செறிபொழில் தென்தி ருப்பேர்
பையர வணையான் நாமம்
பரவிநா னுய்ந்த வாறே (5.9.1)

பெரிய திருமொழி.482

பாசுர எண்: 1429

பாசுரம்
வங்கமார் கடல்க ளேழும்
மலையும்வா னகமும் மற்றும்,
அங்கண்மா ஞால மெல்லாம்
அமுதுசெய் துமிழ்ந்த எந்தை,
திங்கள்மா முகில்அ ணவு
செறிபொழில் தெந்தி ருப்பேர்,
எங்கள்மா லிறைவன் நாமம்
ஏத்திநா னுய்ந்த வாறே (5.9.2)

பெரிய திருமொழி.483

பாசுர எண்: 1430

பாசுரம்
ஒருவனை யுந்திப் பூமேல்
ஓங்குவித் தாகந் தன்னால்,
ஒருவனைச் சாபம் நீக்கி
உம்பராள் , என்று விட்டான்,
பெருவரை மதிள்கள் சூழ்ந்த
பெருநகர் அரவ ணைமேல்
கருவரை வண்ணன் தென்பேர்
கருதிநா னுய்ந்த வாறே (5.9.3)

பெரிய திருமொழி.484

பாசுர எண்: 1431

பாசுரம்
ஊனமர் தலையொன் றேந்தி
உலகெலாம் திரியு மீசன்
ஈனமர் சாபம் நீக்காய்,
என்னவொண் புனலை யீந்தான்,
தேனமர் பொழில்கள் சூழ்ந்த
செறிவயல் தென்தி ருப்பேர்,
வானவர் தலைவன் நாமம்
வாழ்த்திநா னுய்ந்த வாறே (5.9.4)

பெரிய திருமொழி.485

பாசுர எண்: 1432

பாசுரம்
வக்கரன் வாய்முன் கீண்ட
மாயவனே என்று வானேர்
புக்கு, அரண் தந்த ருள்வாய்,
என்னப்பொன் னாகத் தானை,
நக்கரி யுருவ மாகி
நகங்கிளர்ந் திடந்து கந்த,
சக்கரச் செல்வன் தென்பேர்த்
தலைவன்தா ளடைந்துய்ந் தேனே (5.9.5)

பெரிய திருமொழி.486

பாசுர எண்: 1433

பாசுரம்
விலங்கலால் கடல டைத்து
விளங்கிழை பொருட்டு, வில்லால்,
இலங்கைமா நகர்க்கி றைவன்
இருபது புயம்து ணித்தான்,
நலங்கொள்நான் மறைவல் லார்கள்
ஒத்தொலி யேத்தக் கேட்டு
மலங்குபாய் வயல்தி ருப்பேர்
மருவிநான் வாழ்ந்த வாறே (5.9.6)

Enter a number between 1 and 4000.