Songs
பெரிய திருமொழி.432
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1379
பாசுரம்
வையமுண் டாலிலை மேவு
மாயன்மணி நீண்முடி,
பைகொள் நாகத் தணையான்
பயிலுமிட மென்பரால்,
தையல் நல்லார் குழல்மா
லையும்மற்றவர் தடமுலை,
செய்ய சாந்தும் கலந்திழி
புனல்சூழ்தென் னரங்கமே (5.4.2)
பெரிய திருமொழி.433
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1380
பாசுரம்
பண்டிவ் வைய மளப்பான்
சென்றுமாவலி கையில்நீர்
கொண்ட ஆழித் தடக்கைக்
குறளனிட மென்பரால்,
வண்டு பாடும் மதுவார்
புனல்வந்திழி காவிரி
அண்ட நாறும் பொழில்சூழ்ந்து
அழகார்தென் னரங்கமே (5.4.3)
பெரிய திருமொழி.434
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1381
பாசுரம்
விளைத்த வெம்போர் விறல்வா
ளரக்கன்நகர் பாழ்பட,
வளைத்த வல்வில் தடக்கை
யவனுக்கிட மென்பரால்,
துளைக்கை யானை மருப்பு
மகிலும்கொணர்ந் துந்தி,முன்
திளைக்கும் செல்வப் புனல்கா
விரிசூழ்தென் னரங்கமே (5.4.4)
பெரிய திருமொழி.435
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1382
பாசுரம்
வம்புலாம் கூந்தல் மண்டோதரி
காதலன் வான்புக,
அம்பு தன்னால் முனிந்த
அழகனிட மென்பரால்,
உம்பர் கோனு முலகேழும்
வந்தீண்டி வணங்கும், நல்
செம்பொ னாரும் மதிள்சூழ்ந்து
அழகார்தென் னரங்கமே (5.4.5)
பெரிய திருமொழி.436
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1383
பாசுரம்
கலையு டுத்த அகலல்குல்
வன்பேய்மகள் தாயென,
முலைகொ டுத்தா ளுயிருண்
டவன்வாழுமிட மென்பரால்,
குலையெ டுத்த கதலிப்
பொழிலூடும் வந்துந்தி, முன்
அலையெ டுக்கும் புனற்கா
விரிசூழ்தென் னரங்கமே (5.4.6)
பெரிய திருமொழி.437
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1384
பாசுரம்
கஞ்சன் நெஞ்சும் கடுமல்
லரும்சகடமுங்காலினால்,
துஞ்ச வென்ற சுடராழி
யான்வாழுமிட மென்பரால்,
மஞ்சு சேர்மா ளிகைநீ
டகில்புகையும், மறையோர்
செஞ்சொல் வேள்விப் புகையும்
கமழும்தென் னரங்கமே (5.4.7)
பெரிய திருமொழி.438
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1385
பாசுரம்
ஏன மீனா மையோடு
அரியும்சிறு குறளுமாய்,
தானு மாயத் தரணித்
தலைவனிட மென்பரால்,
வானும் மண்ணும் நிறையப்
புகுந்தீண்டி வணங்கும்,நல்
தேனும் பாலும் கலந்தன்
னவர்சேர்த்தென் னரங்கமே (5.4.8)
பெரிய திருமொழி.439
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1386
பாசுரம்
சேய னென்றும் மிகப்பெரியன்
நுண்ணேர்மையி னாய,இம்
மாயையை ஆரு மறியா
வகையானிட மென்பரால்,
வேயின் முத்தும் மணியும்
கொணர்ந்தார்ப்புனற் காவிரி,
ஆய பொன்மா மதிள்சூழ்ந்
தழகார்தென் னரங்கமே (5.4.9)
பெரிய திருமொழி.44
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 991
பாசுரம்
ஊராங்குடந்தையுத்தமன் ஒருகாலிருகால்சிலைவளைய,
தேராவரக்கர்த்தேர்வெள்ளம்செற்றான் வற்றாவருபுனல்சூழ்
பேரான், பேராயிரமுடையான் பிறங்குசிறைவண்டறைகின்ற
தாரான், தாராவயல்சூழ்ந்த சாளக்கிராமமடைநெஞ்சே. 1.5.4
Summary
The supreme Lord of Urakam, and of Kudandai, once bent his bow and killed the many Rakshasas who came battling in a sea of chariots. He is surrounded by ever-flowing waters in Tirupper. He has a thousand names. He wears a garland of bee-humming Tulasi. He resides amid fertile fields with water birds. Go to Him in Saligrama, O Heart!
பெரிய திருமொழி.440
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1387
பாசுரம்
அல்லி மாத ரமரும்
திருமார்வ னரங்கத்தை,
கல்லின் மன்னு மதிள்மங்
கையர்கோன்கலி கன்றிசொல்,
நல்லிசை மாலைகள் நாலி
ரண்டுமிரண் டுமுடன்,
வல்லவர் தாமுல காண்டு
பின்வானுல காள்வரே (5.4.10)