Songs
பெரிய திருமொழி.405
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1352
பாசுரம்
மையார் தடங்கண் கருங்கூந்தல்
ஆய்ச்சி மறைய வைத்ததயிர்,
நெய்யார் பாலோ டமுதுசெய்த
நேமி யங்கை மாயனிடம்,
செய்யார் ஆரல் இரைகருதிச்
செங்கால் நாரை சென்றணையும்,
பொய்யா நாவில் மறையாளர்
புள்ளம் பூதங் குடிதானே (5.1.5)
பெரிய திருமொழி.406
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1353
பாசுரம்
மின்னி னன்ன நுண்மருங்குல்
வேயேய் தடந்தோள் மெல்லியற்கா,
மன்னு சினத்த மழவிடைகள்
ஏழன் றடர்த்த மாலதிடம்,
மன்னு முதுநீ ரரவிந்த
மலர்மேல் வரிவண் டிசைபாட,
புன்னை பொன்னேய் தாதுதிர்க்கும்
புள்ளம் பூதங் குடிதானே (5.1.6)
பெரிய திருமொழி.407
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1354
பாசுரம்
குடையா விலங்கல் கொண்டேந்தி
மாரி பழுதா நிரைகாத்து,
சடையா னோட அடல்வாணன்
தடந்தோள் துணித்த தலைவனிடம்,
குடியா வண்டு கள்ளுண்ணக்
கோல நீலம் மட்டுகுக்கும்,
புடையார் கழனி யெழிலாரும்
புள்ளம் பூதங் குடிதானே (5.1.7)
பெரிய திருமொழி.408
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1355
பாசுரம்
கறையார் நெடுவேல் மறமன்னர்
வீய விசயன் தேர்கடவி,
இறையான் கையில் நிறையாத
முண்டம் நிறைத்த வெந்தையிடம்,
மறையால் மூத்தீ யவைவளர்க்கும்
மன்னு புகழால் வண்மையால்,
பொறையால் மிக்க அந்தணர்வாழ்
புள்ளம் பூதங் குடிதானே (5.1.8)
பெரிய திருமொழி.409
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1356
பாசுரம்
துன்னி மண்ணும் விண்ணாடும்
தோன்றா திருளாய் மூடியநாள்,
அன்ன மாகி யருமறைகள்
அருளிச் செய்த அமலனிடம்,
மின்னு சோதி நவமணியும்
வேயின் முத்தும் சாமரையும்,
பொன்னும் பொன்னி கொணர்ந்தலைக்கும்
புள்ளம் பூதங் குடிதானே (5.1.9)
பெரிய திருமொழி.41
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 988
பாசுரம்
கலையும்கரியும்பரிமாவும்
திரியும்கானம்கடந்துபோய்,
சிலையும்கணையும்துணையாகச்
சென்றான்வென்றிச்செறுக்களத்து,
மலைகொண்டலைநீரணைகட்டி
மதிள்நீரிலங்கைவாளரக்கர்
தலைவன், தலைபத்தறுத்துகந்தான்
சாளக்கிராமமடைநெஞ்சே. 1.5.1
Summary
With bow and arrow, the Lord went through the forest roamed by wild deer, elephants and horses, then made a bridge of rocks over the lashing sea, entered the fortified Lanka city. He stood in the battlefield, and reserved the ten heads of the demon-king victoriously. Go to Him in Saligrama O Heart!
பெரிய திருமொழி.410
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1357
பாசுரம்
கற்றா மறித்து காளியன்றன்
சென்னி நடுங்க நடம்பயின்ற
பொற்றாமரையாள் தன்கேள்வன்
புள்ளம் பூதங்குடிதன்மேல்
கற்றார் பரவும் மங்கையர்க்கோன்
காரார் புயற்கைக் கலிகன்றி,
சொல்தானீரைந் திவைபாடச்
சோர நில்லா துயர்தாமே (5.1.10)
பெரிய திருமொழி.411
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1358
பாசுரம்
தாம்தம் பெருமை யறியார், தூது
வேந்தர்க் காய வேந்த ரூர்போல்,
காந்தள் விரல்மென் கலைநன் மடவார்,
கூந்தல் கமழும் கூட லூரே (5.2.1)
பெரிய திருமொழி.412
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1359
பாசுரம்
செறும்திண் திமிலே றுடைய, பின்னை
பெறும்தண் கோலம் பெற்றா ரூர்ப்போல்,
நறுந்தண் தீம் fதே னுண்ட வண்டு,
குறிஞ்சி பாடும் கூட லூரே (5.2.2)
பெரிய திருமொழி.413
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1360
பாசுரம்
பிள்ளை யுருவாய்த் தயிருண்டு, அடியேன்
உள்ளம் புகுந்த வொருவ ரூர்போல்,
கள்ள நாரை வயலுள், கயல்மீன்
கொள்ளை கொள்ளும் கூட லூரே (5.2.3)