திருவாய்மொழி.911
அருளியவர்: நம்மாழ்வார்
திருவாய்மொழி
பாசுர எண்: 3701
பாசுரம்
ஆகம் சேர்நர சிங்கம தாகி,ஓர்
ஆகங் வள்ளுகி ரால்பிளந் தானுறை,
மாக வைகுந்தம் காண்பதற்கு, என்மனம்
ஏக மெண்ணும் இராப்பக லின்றியே. 9.3.7
Summary
My heart hankers night and day for one Vision of Vaikunta where the Lord dwells. He tore the wide chest of the Asura with his nails
திருவாய்மொழி.912
அருளியவர்: நம்மாழ்வார்
திருவாய்மொழி
பாசுர எண்: 3702
பாசுரம்
இன்றிப் போக இருவினை யும்கெடுத்து,
ஒன்றி யாக்கை புகாமையுய் யக்கொள்வான்,
நின்ற வேங்கடம் நீணிலத் துள்ளது,
சென்று தேவர்கள் கைதொழு வார்களே. 9.3.8
Summary
Destroying pairs of opposites, he gives liberation from rebirth; he resides in Venkatam where gods worship him
திருவாய்மொழி.913
அருளியவர்: நம்மாழ்வார்
திருவாய்மொழி
பாசுர எண்: 3703
பாசுரம்
தொழுது மாமலர் நீர்சுடர் தூபம்கொண்டு,
எழுது மென்னும் இதுமிகை யாதலில்,
பழுதில் தொல்புகழ்ப் பாம்பணைப் பள்ளியாய்,
தழுவு மாறறி யேனுன தாள்களே. 9.3.9
Summary
O Lord of glory on serpent couch! Worshipping you with flowers, water, lamp and incense is superfluous. Alas, I know not how to serve you feet
திருவாய்மொழி.914
அருளியவர்: நம்மாழ்வார்
திருவாய்மொழி
பாசுர எண்: 3704
பாசுரம்
தாள தாமரை யானுன துந்தியான்,
வாள்கொள் நீள்மழு வாளியுன் ஆகத்தான்,
ஆள ராய்த்தொழு வாரும் அமரர்கள்,
நாளும் என்புகழ் கோவுன சீலமே? 9.3.10
Summary
Brahma sits on your lotus-navel. Siva occupies your right side, Celestials stand around you and worship. Can I ever praise you fully?
திருவாய்மொழி.915
அருளியவர்: நம்மாழ்வார்
திருவாய்மொழி
பாசுர எண்: 3705
பாசுரம்
சீல மெல்லையி லானடி மேல்,அணி
கோல நீள்குரு கூர்ச்சட கோபன்fசொல்,
மாலை யாயிரத் துள்ளிவை பத்தினின்
பாலர், வைகுந்த மேறுதல் பான்மையே. (2) 9.3.11
Summary
This decad of the thousand songs by fair kurugur’s Satakopan on the Lord of great virtues will secure high Vaikunta
திருவாய்மொழி.916
அருளியவர்: நம்மாழ்வார்
திருவாய்மொழி
பாசுர எண்: 3706
பாசுரம்
மையார் கருங்கண்ணி கமல மலர்மேல்
செய்யாள், திருமார் வினில்சேர் திருமாலே,
வெய்யார் சுடராழி சுரிசங்க மேந்தும்
கையா, உனைக்காணக் கருதுமென் கண்ணே. 9.4.1
Summary
Lord who sports the dame with dark eyes on his chest, Lord of conch and discus! My eyes pine to see you
திருவாய்மொழி.917
அருளியவர்: நம்மாழ்வார்
திருவாய்மொழி
பாசுர எண்: 3707
பாசுரம்
கண்ணே யுனைக்காணக் கருதி,என் னெஞ்சம்
எண்ணே கொண்ட சிந்தையதாய் நின்றியம்பும்,
விண்ணோர் முனிவர்க் கென்றும்காண் பரியாயை,
நண்ணா தொழியே னென்றுநான் அழைப்பனே. 9.4.2
Summary
Lord, desirous of seeing you, my heart speaks countless thoughts, I call, “I shall not let you go” Alas, he evades even the gods and sages!
திருவாய்மொழி.918
அருளியவர்: நம்மாழ்வார்
திருவாய்மொழி
பாசுர எண்: 3708
பாசுரம்
அழைக்கின்ற வடிநாயேன் நாய்கூழை வாலால்,
குழைக்கின் றதுபோல் என்னுள்ளம் குழையும்,
மழைக்கன்று குன்றமெடுத்த தாநிரை காத்தாய்,
பிழைக்கின்ற தருளென்று பேதுறு வேனே. 9.4.3
Summary
Like a lowly dog that wags, its fall, I call, with my heart melting. Then you protected herds with a hill I fear your grace has missed me
திருவாய்மொழி.919
அருளியவர்: நம்மாழ்வார்
திருவாய்மொழி
பாசுர எண்: 3709
பாசுரம்
உறுவதிது வென்றுனக் காட்பட்டு, நின்கண்
பெறுவ தெதுகொலென்று பேதையேன் நெஞ்சம்,
மறுகல்செய்யும் வானவர் தானவர்க் கென்றும்,
அறிவ தரிய அரியாய அம்மானே. 9.4.4
Summary
Lord confounding the gods and Asuras, you came as Narasimhal Fittingly I have surrendered myself, but fear for what lies ahead
திருவாய்மொழி.920
அருளியவர்: நம்மாழ்வார்
திருவாய்மொழி
பாசுர எண்: 3710
பாசுரம்
அரியாய அம்மானை அமரர் பிரானை,
பெரியானைப் பிரமனை முன்படைத் தானை,
வரிவாள் அரவின் அணைப்பள்ளி கொள்கின்ற,
கரியான் கழல்காணக் கருதும் கருத்தே. 9.4.5
Summary
The Lord of gods came as a lion. He made Brahma too. He reclines on a hooded serpent, My heart seeks his feet