அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

என் நாதன் தேவிக்கு அன்று இன்பப்பூ ஈயாதாள்

தன் நாதன் காணவே தண்பூ மரத்தினை

வன் நாதப் புள்ளால் வலியப் பறித்திட்ட

என் நாதன் வன்மையைப் பாடிப் பற !
எம்பிரான் வன்மையைப் பாடிப் பற !

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

என் வில்வலி கண்டு போ என்று எதிர்வந்தான்

தன் வில்லினோடும் தவத்தை எதிர்வாங்கி

முன் வில் வலித்து முதுபெண் உயிருண்டான்

தன் வில்லின் வன்மையைப் பாடிப் பற !
தாசரதி தன்மையைப் பாடிப் பற !

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

உருப்பிணி நங்கையைத் தேர் ஏற்றிக் கொண்டு

விருப்புற்று அங்கு ஏக விரைந்து எதிர் வந்து

செருக்கு உற்றான் வீரம் சிதையத் தலையைச்

சிரைத்திட்டான் வன்மையைப் பாடிப் பற !

தேவகி சிங்கத்தைப் பாடிப் பற !

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

மாற்றுத்தாய் சென்று வனம்போகே என்றிட

ஈற்றுத்தாய் பின்தொடர்ந்து எம்பிரான் ! என்று அழ

கூற்றுத் தாய் சொல்லக் கொடிய வனம் போன

சீற்றம் இலாதானைப் பாடிப் பற !

சீதை மணாளனைப் பாடிப் பற !

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

பஞ்சவர் தூதனாய்ப் பாரதம் கைசெய்து

நஞ்சு உமிழ் நாகம் கிடந்த நற் பொய்கை புக்கு

அஞ்சப் பணத்தின்மேல் பாய்ந்திட்டு அருள்செய்த

அஞ்சன வண்ணனைப் பாடிப் பற !

அசோதைதன் சிங்கத்தைப் பாடிப் பற !

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

முடி ஒன்றி மூவுலகங்களும் ஆண்டு உன்

அடியேற்கு அருள் என்று அவன்பின் தொடர்ந்த

படியில் குணத்துப் பரத நம்பிக்கு அன்று

அடிநிலை ஈந்தானைப் பாடிப் பற !

அயோத்தியர் கோமானைப் பாடிப் பற !

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

காளியன் பொய்கை கலங்கப் பாய்ந்திட்டு அவன்

நீள் முடி ஐந்திலும் நின்று நடம்செய்து

மீள அவனுக்கு அருள்செய்த வித்தகன்

தோள் வலி வீரமே பாடிப் பற !

தூமணி வண்ணனைப் பாடிப் பற !

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

தார்க்கு இளந்தம்பிக்கு அரசு ஈந்து தண்டகம்

நூற்றவள் சொற்கொண்டு போகி நுடங்கு இடைச்

சூர்ப்பணகாவைச் செவியொடு மூக்கு அவள்

ஆர்க்க அரிந்தானைப் பாடிப் பற !

அயோத்திக்கு அரசனைப் பாடிப் பற !

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

மாயச் சகடம் உதைத்து மருது இறுத்து

ஆயர்களோடு போய் ஆநிரை காத்து அணி

வேயின் குழல் ஊதி வித்தகனாய் நின்ற

ஆயர்கள் ஏற்றினைப் பாடிப் பற !

ஆநிரை மேய்த்தானைப் பாடிப் பற !

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

காரார் கடலை அடைத்திட்டு இலங்கை புக்கு

ஓராதான் பொன்முடி ஒன்பதோடு ஒன்றையும்

நேரா அவன் தம்பிக்கே நீள் அரசு ஈந்த

ஆராவமுதனைப் பாடிப் பற !

அயோத்தியர் வேந்தனைப் பாடிப் பற !

Get in touch

தொடர்பு கொள்ள

Dear Reader,
To contact us please drop an e-mail to any one of the e-mail addresses mentioned below.
meeradevotees@gmail.com
radha.services@gmail.com
ramanujaservices@gmail.com