பாசுர எண்: 0
திருவாய்மொழி : 10

வியன் மூவுலகு பெறினும் போய்த் தானே தானே ஆனாலும்
புயல் மேகம் போல் திருமேனி அம்மான் புனைபூம் கழல் அடிக்கீழ்
சயமே அடிமை தலைநின்றார் திருத்தாள் வணங்கி இம்மையே
பயனே இன்பம் யான் பெற்றது உறுமோ பாவியேனுக்கே?
(திருவாய்மொழி - 8.10.2)

பாசுர எண்: 0
திருவாய்மொழி : 10

உறுமோ பாவியேனுக்கு ? இவ்வுலகம் மூன்றும் உடன் நிறைய
சிறுமா மேனி நிமிர்த்த என் செந்தாமரைக்கண் திருக்குறளன்
நறுமா விரை நாள் மலர் அடிக்கீழ் புகுதல் அன்றி அவன் அடியார்
சிறுமா மனிசராய் என்னை ஆண்டார் இங்கே திரியவே.
(திருவாய்மொழி - 8.10.3)

பாசுர எண்: 0
திருவாய்மொழி : 10

இங்கே திரிந்தேற்கு இழுக்கு உற்று என்? இரு மாநிலமும் முன் உண்டு உமிழ்ந்த
செங்கோலத்த பவளவாய்ச் செந்தாமரைக்கண் என் அம்மான்
பொங்கு ஏழ் புகழ்கள் வாயவாய்ப் புலன்கொள் வடிவு என் மனத்ததாய்
அங்கு ஏய் மலர்கள் கையவாய் வழிப்பட்டு ஓட அருளிலே.
(திருவாய்மொழி - 8.10.4)

பாசுர எண்: 0
திருவாய்மொழி : 10

வழிப்பட்டு ஓட அருள் பெற்று மாயன் கோல மலர் அடிக்கீழ்
சுழிப்பட்டு ஓடும் சுடர்ச்சோதி வெள்ளத்து இன்புற்று இருந்தாலும்
இழிப்பட்டு ஓடும் உடலினில் பிறந்து தன் சீர் யான் கற்று
மொழிப்பட்டு ஓடும் கவி அமுதம் நுகர்ச்சி உறுமோ ? முழுதுமே.
(திருவாய்மொழி - 8.10.5)

பாசுர எண்: 0
திருவாய்மொழி : 10

நுகர்ச்சி உறுமோ ? மூவுலகின் வீடு பேறு தன் கேழ் இல்
புகர்ச் செம் முகத்த களிறு அட்ட பொன் ஆழிக்கை என் அம்மான்
நிகர்ச் செம் பங்கி எரி விழிகள் நீண்ட அசுரர் உயிர் எல்லாம்
தகர்த்து உண்டு உழலும் புள் பாகன் பெரிய தனி மாப் புகழே.
(திருவாய்மொழி - 8.10.6)

பாசுர எண்: 0
திருவாய்மொழி : 10

தனி மாப் புகழே எஞ்ஞான்றும் நிற்கும் படியாத் தான் தோன்றி
முனி மாப் பிரம முதல் வித்தாய் உலகம் மூன்றும் முளைப்பித்த
தனி மாத் தெய்வத் தளிர் அடிக்கீழ்ப் புகுதல் அன்றி அவன் அடியார்
நனி மாக் கலவி இன்பமே நாளும் வாய்க்க நங்கட்கே.
(திருவாய்மொழி - 8.10.7)

பாசுர எண்: 0
திருவாய்மொழி : 10

நாளும் வாய்க்க நங்கட்கு நளிர் நீர்க் கடலைப் படைத்து தன்
தாளும் தோளும் முடிகளும் சமன் இலாத பலபரப்பி
நீளும் படர் பூங் கற்பகக் காவும் நிறை பல் ஞாயிற்றின்
கோளும் உடைய மணி மலைப் போல் கிடந்தான் தமர்கள் கூட்டமே.
(திருவாய்மொழி - 8.10.8)

பாசுர எண்: 0
திருவாய்மொழி : 10

தமர்கள் கூட்ட வல்வினையை நாசம் செய்யும் சது மூர்த்தி
அமர் கொள் ஆழி, சங்கு, வாள், வில், தண்டு ஆதி பல் படையன்
குமரன், கோல ஐங்கணை வேள் தாதை கோது இல் அடியார் தம்
தமர்கள் தமர்கள் தமர்களாம் சதிரே வாய்க்க தமியேற்கே.
(திருவாய்மொழி - 8.10.9)

பாசுர எண்: 0
திருவாய்மொழி : 10

வாய்க்க தமியேற்கு ஊழிதோறு ஊழி ஊழி மா காயாம்
பூக்கொள் மேனி நான்கு தோள் பொன் ஆழிக் கை அம்மான்
நீக்கம் இல்லா அடியார் தம் அடியார் அடியார் அடியார் எம்
கோக்கள்; அவர்க்கே குடிகளாய்ச் செல்லும் நல்ல கோட்பாடே.
(திருவாய்மொழி - 8.10.10)

பாசுர எண்: 0
திருவாய்மொழி : 10

நல்ல கோட்பாட்டு உலகங்கள் மூன்றின் உள்ளும் தான் நிறைந்த
அல்லிக் கமலக் கண்ணனை அம் தண் குருகூர் சடகோபன்
சொல்லப்பட்ட ஆயிரத்துள் இவையும் பத்தும் வல்லார்கள்
நல்ல பதத்தால் மனை வாழ்வர், கொண்ட பெண்டிர் மக்களே.
(திருவாய்மொழி - 8.10.11)

Get in touch

தொடர்பு கொள்ள

Dear Reader,
To contact us please drop an e-mail to any one of the e-mail addresses mentioned below.
meeradevotees@gmail.com
radha.services@gmail.com
ramanujaservices@gmail.com