அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

தார்க்கு இளந்தம்பிக்கு அரசு ஈந்து தண்டகம்

நூற்றவள் சொற்கொண்டு போகி நுடங்கு இடைச்

சூர்ப்பணகாவைச் செவியொடு மூக்கு அவள்

ஆர்க்க அரிந்தானைப் பாடிப் பற !

அயோத்திக்கு அரசனைப் பாடிப் பற !

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

மாயச் சகடம் உதைத்து மருது இறுத்து

ஆயர்களோடு போய் ஆநிரை காத்து அணி

வேயின் குழல் ஊதி வித்தகனாய் நின்ற

ஆயர்கள் ஏற்றினைப் பாடிப் பற !

ஆநிரை மேய்த்தானைப் பாடிப் பற !

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

காரார் கடலை அடைத்திட்டு இலங்கை புக்கு

ஓராதான் பொன்முடி ஒன்பதோடு ஒன்றையும்

நேரா அவன் தம்பிக்கே நீள் அரசு ஈந்த

ஆராவமுதனைப் பாடிப் பற !

அயோத்தியர் வேந்தனைப் பாடிப் பற !

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

நந்தன் மதலையைக் காகுத்தனை நவின்று

உந்தி பறந்த ஒளியிழையார்கள் சொல்

செந்தமிழ்த் தென்புதுவை விட்டுசித்தன் சொல்

ஐந்தினோடு ஐந்தும் வல்லார்க்கு அல்லல் இல்லையே.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

நெறிந்த கருங்குழல் மடவாய் !

நின் அடியேன் விண்ணப்பம் ;

செறிந்த மணி முடிச் சனகன்

சிலை இறுத்து நினைக் கொணர்ந்தது

அறிந்து அரசு களைகட்ட

அருந்தவத்தோன் இடை விலங்கச்

செறிந்த சிலைகொடு தவத்தைச்

சிதைத்ததும் ஓர் அடையாளம்.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

அல்லியம்பூ மலர்க்கோதாய்!

அடிபணிந்தேன் விண்ணப்பம் ;

சொல்லுகேன் கேட்டருளாய்,

துணைமலர்க் கண் மடமானே !

எல்லியம் போது இனிதிருத்தல்

இருந்தது ஓர் இட வகையில்

மல்லிகை மா மாலைகொண்டு

அங்கு ஆர்த்ததும் ஓர் அடையாளம்.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

கலக்கிய மா மனத்தனளாய்க்

கைகேசி வரம் வேண்ட

மலக்கிய மா மனத்தனனாய்

மன்னவனும் மறாது ஒழியக்

குலக்குமரா ! காடு உறையப்

போ என்று விடை கொடுப்ப

இலக்குமணன் தன்னொடும்

அங்கு ஏகியது ஓர் அடையாளம்.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

வார் அணிந்த முலை மடவாய்!

வைதேவீ ! விண்ணப்பம்;

தேர் அணிந்த அயோத்தியர்கோன்

பெருந்தேவீ ! கேட்டருளாய்,

கூர் அணிந்த வேல் வலவன்

குகனோடும் கங்கைதன்னிற்

சீர் அணிந்த தோழமை

கொண்டதும் ஓர் அடையாளம்.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

மான் அமரும் மென்நோக்கி!

வைதேவீ ! விண்ணப்பம் ;

கான் அமரும் கல்அதர் போய்க்

காடு உறைந்த காலத்துத்

தேன் அமரும் பொழிற் சாரல்

சித்திரகூடத்து இருப்பப்

பால்மொழியாய் ! பரத நம்பி

பணிந்ததும் ஓர் அடையாளம்.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

சித்திரகூடத்து இருப்பச்
சிறுகாக்கை முலை தீண்ட
அத்திரமே கொண்டு எறிய
அனைத்து உலகும்திரிந்து ஓடி
வித்தகனே ! இராமாவோ !
நின் அபயம் என்று அழைப்ப
அத்திரமே அதன்கண்ணை
அறுத்ததும் ஓர் அடையாளம்.

Get in touch

தொடர்பு கொள்ள

Dear Reader,
To contact us please drop an e-mail to any one of the e-mail addresses mentioned below.
meeradevotees@gmail.com
radha.services@gmail.com
ramanujaservices@gmail.com