அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

கைத்தலத்து உள்ள மாடு அழியக்

கண்ணாலங்கள் செய்து இவளை

வைத்து வைத்துக்கொண்டு என்ன வாணிபம் ?

நம்மை வடுப்படுத்தும்

செய்த்தலை எழு நாற்றுப் போல் அவன்

செய்வன செய்துகொள்ள

மைத் தடமுகில் வண்ணன் பக்கல்

வளர விடுமின்களே.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

பெருப் பெருத்த கண்ணாலங்கள் செய்து

பேணி நம் இல்லத்துள்ளே

இருத்துவான் எண்ணி நாம் இருக்க,

இவளும் ஒன்று எண்ணுகின்றாள் ;

மருத்துவப் பதம் நீங்கினாள் என்னும்
வார்த்தை படுவதன்முன்,
ஒருப்படுத்து இடுமின் இவளை
உலகளந்தான் இடைக்கே.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது


ஞாலம் முற்றும் ஆலிலைத் துயில்

நாராயணனுக்கு இவள்

மாலதாகி மகிழ்ந்தனள் என்று

தாய் உரை செய்ததனை

கோலம் ஆர் பொழில் சூழ் புதுவையர்க்கோன்

விட்டுசித்தன் சொன்ன

மாலை பத்தும் வல்லவர்கட்கு

இல்லை வரு துயரே.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

நல்லது ஓர் தாமரைப் பொய்கை

நாண்மலர் மேல் பனி சோர,

அல்லியும் தாதும் உதிர்ந்திட்டு,

அழகழிந்தாள் ஒத்ததாலோ!

இல்லம் வெறியோடிற்றாலோ !

என்மகளை எங்கும் காணேன்;

மல்லரை அட்டவன் பின் போய்

மதுரைப் புறம் புக்காள் கொல்லோ ?

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது


ஒன்றும் அறிவு ஒன்று இல்லாத

உருவறைக் கோபாலர் தங்கள்

கன்று கால் மாறுமா போலே,

கன்னி இருந்தாளைக் கொண்டு

நன்றும் கிறி செய்து போனான்;

நாராயனன் செய்த தீமை

என்றும் எமர்கள் குடிக்கு ஓர்

ஏச்சுக்கொல் ஆயிடுங் கொல்லோ?

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

குமரி மணம் செய்து கொண்டு ,

கோலம் செய்து இல்லத்து இருத்தி,

தமரும் பிறரும் அறியத்

தாமோதரற்கு என்று சாற்றி ,

அமரர் பதியுடைத் தேவி

அரசாணியை வழிபட்டு,

துமிலம் எழப் பறை கொட்டித்

தோரணம் நாட்டிடுங் கொல்லோ?

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

ஒரு மகள் தன்னை உடையேன்,

உலகம் நிறைந்த புகழால்

திருமகள் போல வளர்த்தேன்;

செங்கண் மால் தான் கொண்டு போனான்

பெரு மகளாய்க் குடி வாழ்ந்து

பெரும்பிள்ளை பெற்ற அசோதை

மருமகளைக் கண்டு உகந்து

மணாட்டுப் புறம்செய்யுங் கொல்லோ ?

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது


தம் மாமன் நந்தகோபாலன்

தழீஇக் கொண்டு , என் மகள் தன்னைச்

செம்மாந்திரரே என்று சொல்லி,

செழுங் கயற் கண்ணும் செவ்வாயும்

கொம்மை முலையும் இடையும்

கொழும்பணைத் தோள்களும் கண்டிட்டு,

இம் மகளைப் பெற்ற தாயர்

இனித் தரியார் என்னுங் கொல்லோ?

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது


வேடர் மறக்குலம் போலே

வேண்டிற்றுச் செய்து என்மகளைக்

கூடிய கூட்டமே யாகக்

கொண்டு குடி வாழுங் கொல்லோ?

நாடும் நகரும் அறிய

நல்லது ஓர் கண்ணாலம் செய்து,

சாடு இறப் பாய்ந்த பெருமான்

தக்கவா கைப்பற்றுங் கொல்லோ?

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

அண்டத்து அமரர் பெருமான்

ஆழியான் இன்று என்மகளைப்

பண்டப் பழிப்புக்கள் சொல்லிப்

பரிசு அற ஆண்டிடுங் கொல்லோ?

கொண்டு குடிவாழ்க்கை வாழ்ந்து

கோவலப் பட்டம் கவித்துப்

பண்டை மணாட்டிமார் முன்னே

பாதுகாவல் வைக்குங் கொல்லோ ?

Get in touch

தொடர்பு கொள்ள

Dear Reader,
To contact us please drop an e-mail to any one of the e-mail addresses mentioned below.
meeradevotees@gmail.com
radha.services@gmail.com
ramanujaservices@gmail.com