அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

மன்னன்தன் தேவிமார் கண்டு மகிழ்வு எய்த

முன்இவ் உலகினை முற்றும் அளந்தவன்

பொன்னின் முடியினைப் பூஅணைமேல் வைத்துப்

பின்னே இருந்து குழல்வாராய், அக்காக்காய்!

பேர்ஆயிரத்தான் குழல்வாராய், அக்காக்காய்!

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

கண்டார் பழியாமே அக்காக்காய் கார்வண்ணன்

வண்டு ஆர் குழல்வார வா என்ற ஆய்ச்சி சொல்

விண் தோய் மதில் வில்லிபுத்தூர்க் கோன் பட்டன் சொல்

கொண்டாடிப் பாடக் குறுகா வினை தாமே.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

கிழக்கிற் குடி மன்னர் கேடு இலாதாரை

அழிப்பான் நினைந்திட்டு அவ் ஆழி அதனால்

விழிக்கும் அளவிலே வேர் அறுத்தானைக்

குழற்கு அணி ஆகக் குழல்வாராய் ! அக்காக்காய்!

கோவிந்தன் தன் குழல்வாராய் , அக்காக்காய்!

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

வேலிக் கோல் வெட்டி விளையாடு வில் ஏற்றி
தாலிக் கொழுந்தைத் தடங்கழுத்திற் பூண்டு
பீலித் தழையைப் பிணைத்துப் பிறகிட்டு,
காலிப் பின் போவாற்கு ஓர் கோல் கொண்டு வா,
கடல்நிற வண்ணற்கு ஓர்கோல் கொண்டு வா.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

கொங்கும் குடந்தையும் கோட்டியூரும் பேரும்
எங்கும் திரிந்து விளையாடும் என்மகன்
சங்கம் பிடிக்கும் தடக்கைக்குத் தக்க நல்
அங்கம் உடையது ஓர் கோல் கொண்டு வா,
அரக்கு வழித்தது ஓர் கோல் கொண்டு வா.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

கறுத்திட்டு எதிர்நின்ற கஞ்சனைக் கொன்றான் ,
பொறுத்திட்டு எதிர்வந்த புள்ளின் வாய் கீண்டான்;
நெறித்த குழல்களை நீங்க முன் ஓடிச்
சிறுக்கன்று மேய்ப்பாற்கு ஓர் கோல் கொண்டு வா,
தேவபிரானுக்கு ஓர் கோல் கொண்டு வா.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

ஒன்றே உரைப்பான் ஒரு சொல்லே சொல்லுவான்
துன்று முடியான் துரியோதனன் பக்கல்,
சென்று அங்குப் பாரதம் கையெறிந்தானுக்குக்
கன்றுகள் மேய்ப்பது ஓர் கோல் கொண்டு வா,
கடல்நிற வண்ணற்கு ஓர் கோல் கொண்டு வா.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

சீர் ஒன்று தூதாய்த் துரியோதனன் பக்கல்
ஊர் ஒன்று வேண்டிப் பெறாத உரோடத்தால் ,
பார் ஒன்றிப் பாரதம் கைசெய்து பார்த்தற்குத்
தேர் ஒன்றை ஊர்ந்தாற்கு ஓர் கோல் கொண்டு வா,
தேவபிரானுக்கு ஓர் கோல் கொண்டு வா

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

ஆலத்து இலையான் அரவின் அணை மேலான் ,
நீலக் கடலுள் நெடுங்காலம் கண்வளர்ந்தான் ;
பாலப் பிராயத்தே பார்த்தற்கு அருள்செய்த
கோலப் பிரானுக்கு ஓர் கோல் கொண்டு வா,
குடந்தைக் கிடந்தாற்கு ஓர் கோல் கொண்டு வா.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

பொன்திகழ் சித்திரகூடப் பொருப்பினில்
உற்ற வடிவில் கண்ணும் கொண்ட அக்
கற்றைக் குழலன் கடியன் விரைந்து உன்னை
மற்றைக் கண் கொள்ளாமே கோல் கொண்டு வா,
மணிவண்ண நம்பிக்கு ஓர் கோல் கொண்டு வா.

Get in touch

தொடர்பு கொள்ள

Dear Reader,
To contact us please drop an e-mail to any one of the e-mail addresses mentioned below.
meeradevotees@gmail.com
radha.services@gmail.com
ramanujaservices@gmail.com