அருளியவர்: நம்மாழ்வார்
திவ்ய தேசம்:

பாசுர எண்: 2082
திருவாய்மொழி : 1

உயர்வற உயர்நலம் உடையவன் எவன் ? அவன்*
மயர்வற மதிநலம் அருளினன் எவன் ? அவன்*
அயர்வறும் அமரர்கள் அதிபதி எவன் ? அவன்*
துயரறு சுடரடி தொழுதெழென் மனனே !

உயர்வு அற உயர் நலம் உடையவன் எவன்? அவன்,

மயர்வு அற மதி-நலம் அருளினன் எவன்? அவன்,
அயர்வு அறும் அமரர்கள் அதிபதி எவன்? அவன்,
துயர் அறு சுடர்  அடி தொழுது எழு என் மனனே!

அருளியவர்: நம்மாழ்வார்
திவ்ய தேசம்:

பாசுர எண்: 0
திருவாய்மொழி : 1

மனம் அகம் மலர் அற மலர் மிசை எழுதரும்

மனன் உணர்வு அளவு இலன், பொறி உணர்வு அவை இலன்;
இனன் உணர், முழுணஙநலம், எதிர் நிகழ் கழிவினும்
இனன் இலன், எனன் உயிர், மிகுநரை இலனே.

அருளியவர்: நம்மாழ்வார்
திவ்ய தேசம்:

பாசுர எண்: 0
திருவாய்மொழி : 1

இலன் அது, உடையன் இது; என நினைவு அரியவன்;

நிலனிடை விசும்பிடை உருவினன் அருவினன்;
புலனோடு புலன் அலன், ஒழிவு இலன்; பரந்த அந்
நலன் உடை ஒருவனை நணுகினும் நாமே.

அருளியவர்: நம்மாழ்வார்
திவ்ய தேசம்:

பாசுர எண்: 0
திருவாய்மொழி : 1

நாம் அவன் இவன் உவன், அவள் இவள் உவள் எவள்,

தாம் அவர் இவர் உவர், அது இது உது எது,
வீம் அவை இவை உவை, அவை நலம், தீங்கு அவை,
ஆம் அவை, ஆயவை, ஆய் நின்ற அவரே.

அருளியவர்: நம்மாழ்வார்
திவ்ய தேசம்:

பாசுர எண்: 0
திருவாய்மொழி : 1

அவரவர் தமதமது அறிவு அறி வகைவகை
அவரவர் இறையவர் என அடி அடையவர்கள்;
அவரவர் இறையவர் குறைவு இலர்; இறையவர்

அவரவர் விதி வழி அடைய நின்றனரே.

அருளியவர்: நம்மாழ்வார்
திவ்ய தேசம்:

பாசுர எண்: 0
திருவாய்மொழி : 1

நின்றனர் இருந்தனர் கிடந்தனர் திரிந்தனர்,
நின்றிலர் இருந்திலர் கிடந்திலர் திரிந்திலர்,
என்றும் ஓர் இயல்வினர் என நினைவு அரியவர்;

என்றும் ஓர் இயல்வொடு நின்ற எம் திடரே.

அருளியவர்: நம்மாழ்வார்
திவ்ய தேசம்:

பாசுர எண்: 0
திருவாய்மொழி : 1

திடவிசும்பு, எரி, வளி, நீர், நிலம் இவைமிசைப்
படர் பொருள் முழுவதும் ஆய், அவை அவை தொறும்
உடல் மிசை உயிர் எனக் கரந்து எங்கும் பரந்துளன்,

சுடர் மிகு சுருதியுள் இவை உண்ட சுரனே.

அருளியவர்: நம்மாழ்வார்
திவ்ய தேசம்:

பாசுர எண்: 0
திருவாய்மொழி : 1

சுரர் அறிவு அரு நிலை விண் முதல் முழுவதும்
வரன் முதலாய், அவை முழுது உண்ட பரபரன்
புரம் ஒரு மூன்று எரித்து, அமரர்க்கும் அறிவியந்து,

அரன் அயன் என, உலகு அழித்து அமைத்து உளனே.

அருளியவர்: நம்மாழ்வார்
திவ்ய தேசம்:

பாசுர எண்: 0
திருவாய்மொழி : 1

உளன் எனில் உளன், அவன் உருவம் இவ் உருவுகள்;
உளன் அலன் எனில், அவன் அருவம் இவ் அருவுகள்;
உளன் என, இலன் என, இவை குணம் உடைமையில்,

உளன் இரு தகைமையொடு ஒழிவு இலன் பரந்தே.

அருளியவர்: நம்மாழ்வார்
திவ்ய தேசம்:

பாசுர எண்: 0
திருவாய்மொழி : 1

பரந்த தண் பரவையுள் நீர் தொறும் பரந்துளன்
பரந்த அண்டம் இது என:நிலம் விசும்பு ஒழிவு அறக்
கரந்த சில் இடந்தொறும் இடம் திகழ் பொருள்தொறும்

கரந்து, எங்கும் பரந்துளன் இவை உண்ட கரனே.

Get in touch

தொடர்பு கொள்ள

Dear Reader,
To contact us please drop an e-mail to any one of the e-mail addresses mentioned below.
meeradevotees@gmail.com
radha.services@gmail.com
ramanujaservices@gmail.com