அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்:

தண்டொடு சக்கரம் சார்ங்கம் ஏந்தும் தடக்கையன்

கண் துயில்கொள்ளக் கருதிக் கொட்டாவி கொள்கின்றான் ;

உண்ட முலைப்பால் அறா கண்டாய் உறங் காவிடில்,

விண்தனில் மன்னிய மா மதீ ! விரைந்து ஓடி வா.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்:

பாலகன் என்று பரிபவம் செய்யேல், பண்டு ஒரு நாள்

ஆலின் இலை வளர்ந்த சிறுக்கன் அவன் இவன்;

மேல் எழப் பாய்ந்து பிடித்துக் கொள்ளும் வெகுளுமேல் ,

மாலை மதியாதே , மா மதீ ! மகிழ்ந்து ஓடி வா .

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்:

சிறியன் என்று என் இளஞ் சிங்கத்தை இக - ழேல் கண்டாய்,
சிறுமையின் வார்த்தையை மாவலியிடைச் சென்று கேள்;
சிறுமைப் பிழை கொள்ளில் நீயும் உன் தேவைக்கு உரியை காண்;

நிறைமதீ ! நெடுமால் விரைந்து உன்னைக் கூவுகின்றான்.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்:

தாழியில் வெண்ணெய் தடங்கை ஆர விழுங்கிய
பேழை வயிற்று எம்பிரான் கண்டாய், உன்னைக் கூவுகின்றான்;
ஆழிகொண்டு உன்னை எறியும், ஐயுறவு இல்லை காண்,

வாழ உறுதியேல், மா மதீ! மகிழ்ந்து ஒடி வா.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்:

மைத்தடங் கண்ணி யசோதை தன்மகனுக்கு இவை
ஒத்தன சொல்லி உரைத்த மாற்றம் ஓளிபுத்தூர்
வித்தகன் விட்டுசித்தன் விரித்த தமிழ் இவை

எத்தனையும் சொல்ல வல்லவர்க்கு இடர் இல்லையே.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்:

மாணிக்கம் கட்டி வயிரம் இடை கட்டி

ஆணிப் பொன்னால் செய்த வண்ணச் சிறுத்தொட்டில்

பேணி உனக்குப் பிரமன் விடுதந்தான் ;

மாணிக் குறளனே ! தாலேலோ ! வையம் அளந்தானே! தாலேலோ

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்:

உடையார் கனமணியோடு ஓண் மாதுளம்பூ

இடை விரவிக் கோத்த எழிற் தெழ்கினோடு

விடை ஏறு காபாலி ஈசன் விடுதந்தான்;

உடையாய் ! அழேல் அழேல் தாலேலோ ! உலகம் அளந்தானே ! தாலேலோ !

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்:

என்தம்பிரானார் எழிற்திருமார்வர்க்கு

சந்தம் அழகிய தாமரைத் தாளற்கு,

இந்திரன்தானும் எழில் உடைக் கிண்கிணி

தந்து உவனாய் நின்றான். தாலேலோ! தாமரைக் கண்ணனே! தாலேலோ !

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்:

சங்கின் வலம்புரியும் சேவடிக் கிண்கிணியும்

அங்கைச் சரிவளையும் நாணும் அரைத்தொடரும்

அங்கண் விசும்பில் அமரர்கள் போத்தந்தார் ,

செங்கண் கருமுகிலே ! தாலேலோ ! தேவகி சிங்கமே ! தாலேலோ !

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்:

எழில் ஆர் திருமார்வுக்கு ஏற்கும் இவை என்று

அழகிய ஐம்படையும் ஆரமும் கொண்டு

வழு இல் கொடையான் வயிச்சிரவணன்

தொழுது உவனாய் நின்றான் ; தாலேலோ ! தூமணி வண்ணனே தாலேலோ !

Get in touch

தொடர்பு கொள்ள

Dear Reader,
To contact us please drop an e-mail to any one of the e-mail addresses mentioned below.
meeradevotees@gmail.com
radha.services@gmail.com
ramanujaservices@gmail.com