அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

கைந்நாகத்து இடர் கடிந்த கனல் ஆழிப்

படை உடையான் கருதும் கோயில்

தென் நாடும் வடநாடும் தொழுநின்ற

திருவரங்கத் திருப்பதியின் மேல்

மெய்ந்நாவன் மெய்அடியான் விட்டுசித்தன்

விரித்த தமிழ் உரைக்க வல்லார்

எஞ்ஞான்றும் எம்பெருமான் இணையடிக்கீழ்

இணை பிரியாது இருப்பர் தாமே.

துப்புடையாரை அடைவது எல்லாம்

சோர்விடத்துத் துணை ஆவர் என்றே ;

ஒப்பிலேன் ஆகிலும் நின் அடைந்தேன்

ஆனைக்கு நீ அருள் செய்தமையால் ;

எய்ப்பு என்னை வந்து நலியும் போது அங்கு

ஏதும் நான் உன்னை நினைக்கமாட்டேன்;

அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்.

அரங்கத்து அரவணைப் பள்ளியானே

சாம் இடத்து என்னை குறிக்கொள் கண்டாய்,

சங்கொடு சக்கரம் ஏந்தினானே !

நா மடித்து என்னை அனேக தண்டம்

செய்வதா நிற்பர் நமன்தமர்கள் ;

போம் இடத்து உன்திறத்து எத்தனையும்

புகாவண்ணம் நிற்பதோர் மாயை வல்லை;

ஆம் இடத்து உன்னைச் சொல்லி வைத்தேன்,

அரங்கத்து அரவணைப் பள்ளியானே!

எல்லையில் வாசல் குறுகச் சென்றால்

எற்றி நமன் தமர் பற்றும் போது*

நில்லுமின் என்னும் உபாயம் இல்லை;

நேமியும் சங்கமும் ஏந்தினானே*

சொல்லலாம் போதே உன் நாமம் எல்லாம்

சொல்லினேன் என்னைக் குறிக் கொண்டு என்றும்*

அல்லற் படா வண்ணம் காக்க வேண்டும்;

அரங்கத்து அரவணைப் பள்ளியானே !

Get in touch

தொடர்பு கொள்ள

Dear Reader,
To contact us please drop an e-mail to any one of the e-mail addresses mentioned below.
meeradevotees@gmail.com
radha.services@gmail.com
ramanujaservices@gmail.com