அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

மான் அமரும் மென்நோக்கி!

வைதேவீ ! விண்ணப்பம் ;

கான் அமரும் கல்அதர் போய்க்

காடு உறைந்த காலத்துத்

தேன் அமரும் பொழிற் சாரல்

சித்திரகூடத்து இருப்பப்

பால்மொழியாய் ! பரத நம்பி

பணிந்ததும் ஓர் அடையாளம்.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

சித்திரகூடத்து இருப்பச்
சிறுகாக்கை முலை தீண்ட
அத்திரமே கொண்டு எறிய
அனைத்து உலகும்திரிந்து ஓடி
வித்தகனே ! இராமாவோ !
நின் அபயம் என்று அழைப்ப
அத்திரமே அதன்கண்ணை
அறுத்ததும் ஓர் அடையாளம்.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

மின் ஒத்த நுண் இடையாய் !

மெய் அடியேன் விண்ணப்பம் ;

பொன் ஒத்த மான் ஒன்று

புகுந்து இனிது விளையாட

நின் அன்பின் வழிநின்று

சிலை பிடித்து எம்பிரான் ஏகப்

பின்னே அங்கு இலக்குமணன்

பிரிந்ததும் ஓர் அடையாளம்.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

மைத் தகு மா மலர்க்குழலாய் !

வைதேவீ ! விண்ணப்பம் ;

ஒத்த புகழ் வானரக்கோன்

உடன் இருந்து நினைத் தேட

அத்தகு சீர் அயோத்தியர்கோன்

அடையாளம் இவைமொழிந்தான்

இத் தகையால் அடையாளம்;

ஈது அவன் கைம் மோதிரமே .

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

திக்கு நிறை புகழாளன்

தீ வேள்விச் சென்ற நாள்

மிக்க பெரும் சபை நடுவே

வில் இறுத்தான் மோதிரம் கண்டு

ஒக்குமால் அடையாளம்,

அனுமான் ! என்று உச்சிமேல்

வைத்துக்கொண்டு உகந்தனளால்

மலர்க்குழலாள் சீதையுமே.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

வார் ஆரும் முலை மடவாள்

வைதேவி தனைக் கண்டு

சீர் ஆரும் திறல் அனுமன்

தெரிந்து உரைத்த அடையாளம்

பார் ஆரும் புகழ்ப் புதுவைப்

பட்டர்பிரான் பாடல் வல்லார்

ஏர் ஆரும் வைகுந்தத்து

இமையவரோடு இருப்பாரே.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

கதிர் ஆயிரம் இரவி கலந்து

எறித்தால் ஒத்த நீள்முடியன்

எதிர் இல் பெருமை இராமனை

இருக்கும் இடம் நாடுதிரேல்,

அதிரும் கழற்பொருதோள்

இரணியன் ஆகம் பிளந்து அரியாய்

உதிரம் அளைந்த கையோடு இருந்தானை

உள்ளவா கண்டார் உளர்.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

நாந்தகம் சங்கு தண்டு நாண் ஒலிச்

சார்ங்கம் திருச்சக்கரம்

ஏந்து பெருமை இராமனை

இருக்கும் இடம் நாடுதிரேல்,

காந்தள் முகிழ் விரற் சீதைக்கு

ஆகிக் கடுஞ்சிலை சென்று இறுக்க

வேந்தர்தலைவன் சனகராசன்தன்

வேள்வியிற்கண்டார் உளர்

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

கொலையானைக் கொம்பு பறித்து கூடலர்

சேனை பொருது அழியச்

சிலையால் மராமரம் எய்த தேவனைச்

சிக்கென நாடுதிரேல்

தலையால் குரக்கினம் தாங்கிச் சென்று

தடவரை கொண்டு அடைப்ப

அலை ஆர்க்கடற்கரை வீற்றிருந்தானை

அங்குத்தைக் கண்டார் உளர்

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

தோயம் பரந்த நடுவு சூழலிற்

தொல்லை வடிவு கொண்ட
மாயக் குழவி யதனை நாடுறில்

வம்மின், சுவடு உரைக்கேன்;

ஆயர் மடமகள் பின்னைக்கு ஆகி

அடல் விடை ஏழினையும்

வீயப் பொருது வியர்த்து நின்றானை

மெய்ம்மையே கண்டார் உளர்.

Get in touch

தொடர்பு கொள்ள

Dear Reader,
To contact us please drop an e-mail to any one of the e-mail addresses mentioned below.
meeradevotees@gmail.com
radha.services@gmail.com
ramanujaservices@gmail.com