அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

பேசவும் தரியாத பெண்மையின்

பேதையேன் பேதை இவள்

கூசமின்றி நின்றார்கள் தம் எதிர்

கோல் கழிந்தான் மூழையாய்,

கேசவா ! என்றும் கேடிலீ ! என்றும்

கிஞ்சுக வாய் மொழியாள்

வாச வார்குழல் மங்கைமீர் ! இவள்

மால் உறுகின்றாளே.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

காறை பூணும் , கண்ணாடி காணும் , தன்

கையில் வளை குலுக்கும் ;

கூறை உடுக்கும், அயர்க்கும், தன்
கொவ்வைச் செவ்வாய் திருத்தும் ;
தேறி தேறி நின்று ஆயிரம் பேர்த்
தேவன் திறம் பிதற்றும் ;
மாறில் மா மணிவண்ணன்மேல் இவள்
மால் உறுகின்றாளே.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

கைத்தலத்து உள்ள மாடு அழியக்

கண்ணாலங்கள் செய்து இவளை

வைத்து வைத்துக்கொண்டு என்ன வாணிபம் ?

நம்மை வடுப்படுத்தும்

செய்த்தலை எழு நாற்றுப் போல் அவன்

செய்வன செய்துகொள்ள

மைத் தடமுகில் வண்ணன் பக்கல்

வளர விடுமின்களே.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

பெருப் பெருத்த கண்ணாலங்கள் செய்து

பேணி நம் இல்லத்துள்ளே

இருத்துவான் எண்ணி நாம் இருக்க,

இவளும் ஒன்று எண்ணுகின்றாள் ;

மருத்துவப் பதம் நீங்கினாள் என்னும்
வார்த்தை படுவதன்முன்,
ஒருப்படுத்து இடுமின் இவளை
உலகளந்தான் இடைக்கே.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது


ஞாலம் முற்றும் ஆலிலைத் துயில்

நாராயணனுக்கு இவள்

மாலதாகி மகிழ்ந்தனள் என்று

தாய் உரை செய்ததனை

கோலம் ஆர் பொழில் சூழ் புதுவையர்க்கோன்

விட்டுசித்தன் சொன்ன

மாலை பத்தும் வல்லவர்கட்கு

இல்லை வரு துயரே.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

நல்லது ஓர் தாமரைப் பொய்கை

நாண்மலர் மேல் பனி சோர,

அல்லியும் தாதும் உதிர்ந்திட்டு,

அழகழிந்தாள் ஒத்ததாலோ!

இல்லம் வெறியோடிற்றாலோ !

என்மகளை எங்கும் காணேன்;

மல்லரை அட்டவன் பின் போய்

மதுரைப் புறம் புக்காள் கொல்லோ ?

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது


ஒன்றும் அறிவு ஒன்று இல்லாத

உருவறைக் கோபாலர் தங்கள்

கன்று கால் மாறுமா போலே,

கன்னி இருந்தாளைக் கொண்டு

நன்றும் கிறி செய்து போனான்;

நாராயனன் செய்த தீமை

என்றும் எமர்கள் குடிக்கு ஓர்

ஏச்சுக்கொல் ஆயிடுங் கொல்லோ?

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

குமரி மணம் செய்து கொண்டு ,

கோலம் செய்து இல்லத்து இருத்தி,

தமரும் பிறரும் அறியத்

தாமோதரற்கு என்று சாற்றி ,

அமரர் பதியுடைத் தேவி

அரசாணியை வழிபட்டு,

துமிலம் எழப் பறை கொட்டித்

தோரணம் நாட்டிடுங் கொல்லோ?

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

ஒரு மகள் தன்னை உடையேன்,

உலகம் நிறைந்த புகழால்

திருமகள் போல வளர்த்தேன்;

செங்கண் மால் தான் கொண்டு போனான்

பெரு மகளாய்க் குடி வாழ்ந்து

பெரும்பிள்ளை பெற்ற அசோதை

மருமகளைக் கண்டு உகந்து

மணாட்டுப் புறம்செய்யுங் கொல்லோ ?

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது


தம் மாமன் நந்தகோபாலன்

தழீஇக் கொண்டு , என் மகள் தன்னைச்

செம்மாந்திரரே என்று சொல்லி,

செழுங் கயற் கண்ணும் செவ்வாயும்

கொம்மை முலையும் இடையும்

கொழும்பணைத் தோள்களும் கண்டிட்டு,

இம் மகளைப் பெற்ற தாயர்

இனித் தரியார் என்னுங் கொல்லோ?

Get in touch

தொடர்பு கொள்ள

Dear Reader,
To contact us please drop an e-mail to any one of the e-mail addresses mentioned below.
meeradevotees@gmail.com
radha.services@gmail.com
ramanujaservices@gmail.com