அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

கண்ணில் மணல்கொடு தூவிக்

காலினால் பாய்ந்தனை என்று என்று

எண் அரும் பிள்ளைகள் வந்திட்டு

இவர் ஆல் முறைப்படுகின்றார் ;

கண்ணனே ! வெள்ளறை நின்றாய்
கண்டாரோடே தீமை செய்வாய் !
வண்ணமே வேலையது ஒப்பாய் !
வள்ளலே காப்பிட வாராய் .

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

பல்லாயிரவர் இவ் ஊரில்

பிள்ளைகள் தீமைகள் செய்வார்,

எல்லாம் உன்மேல் அன்றிப் போகாது ;

எம்பிரான் ! நீ இங்கே வாராய் ;

நல்லார்கள் வெள்ளறை நின்றாய் !

ஞானச் சுடரே ! உன்மேனி

சொல் ஆர வாழ்த்தி நின்ற ஏத்திச்

சொப்படக் காப்பிட வாராய் .

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

கஞ்சன் கறுக்கொண்டு நின்மேல்

கரு நிறச் செம் மயிர்ப் பேயை

வஞ்சிப்பதற்கு விடுத்தான்

என்பது ஓர் வார்த்தையும் உண்டு;

மஞ்சு தவழ் மணி மாட

மதிள் திருவெள்ளறை நின்றாய்!

அஞ்சுவன் நீ அங்கு நிற்க,

அழகனே ! காப்பிட வாராய் .

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

கள்ளச் சகடும் மருதும்

கலக்கு அழிய உதைசெய்த

பிள்ளையரசே! நீ பேயைப்

பிடித்து முலை உண்ட பின்னை

உள்ளவாறு ஒன்றும் அறியேன் ;

ஒளியுடை வெள்ளறை நின்றாய் !

பள்ளிகொள் போது இது ஆகும் ;

பரமனே ! காப்பிட வாராய்

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

இன்பம் அதனை உயர்த்தாய் !
இமையவர்க்கு என்றும் அரியாய்!

கும்பக் களிறு அட்ட கோவே !

கொடுங் கஞ்சன் நெஞ்சினிற் கூற்றே !
செம்பொன் மதிள் வெள்ளறையாய் !
செல்வத்தினால் வளர் பிள்ளாய் !
கம்பக் கபாலி காண் அங்கு ;
கடிது ஓடிக் காப்பிட வாராய்.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

இருக்கொடு நீர் சங்கிற் கொண்டிட்டு

எழில் மறையோர் வந்து நின்றார் ;

தருக்கேல், நம்பி ! சந்தி நின்று,

தாய் சொல்லுக் கொள்ளாய் சில நாள் ;

திருக்காப்பு நான் உன்னைச் சாத்த,

தேசு உடை வெள்ளறை நின்றாய் !

உருக் காட்டும் அந்தி விளக்கு இன்று

ஒளி கொள்ள ஏற்றுகேன் வாராய்

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

போது அமர் செல்வக்கொழுந்து

புணர் திருவெள்ளறையானை

மாதர்க்கு உயர்ந்த அசோதை

மகன்தன்னைக் காப்பிட்ட மாற்றம்

வேதப் பயன் கொள்ள வல்ல

விட்டுசித்தன் சொன்ன மாலை

பாதப் பயன் கொள்ள வல்ல

பத்தர் உள்ளார் வினை போமே.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

வெண்ணெய் விழுங்கி வெறுங் கலத்தை

வெற்பிடை இட்டு அதன் ஓசை கேட்கும்;

கண்ணபிரான் கற்ற கல்வி தன்னைக்

காக்கில்லோம் , உன்மகனைக் காவாய்;

புண்ணிற் புளிப் பெய்தால் ஒக்கும் தீமை

புரை புரையால் இவை செய்ய வல்ல

அண்ணற் கண்ணான் ஓர் மகனைப் பெற்ற

அசோதை நங்காய்! உன்மகனைக் கூவாய்.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

வருக, வருக ,வருக இங்கே,

வாமன நம்பீ ! வருக இங்கே.

கரிய குழல் செய்ய வாய் முகத்து

காகுத்த நம்பீ ! வருக இங்கே.

அரியன் இவன் எனக்கு இன்று , நங்காய்!

அஞ்சனவண்ணா ! அசலகத்தார்

பரிபவம் பேசத் தரிக்ககில்லேன்;

பாவியேனுக்கு இங்கே போதராயே.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

திரு உடைப் பிள்ளைதான் தீயவாறு

தேக்கம் ஒன்றும் இலன், தேசு உடையன்,

உருக வைத்த குடத்தோடு வெண்ணெய்

உறிஞ்சி உடைத்திட்டுப் போந்து நின்றான்;

அருகு இருந்தார் தம்மை அநியாயம்

செய்வதுதான் வழக்கோ ? அசோதாய் !

வருக என்று உன்மகனைதன்னைக் கூவாய்

வாழ ஒட்டான் மதுசூதனனே .

Get in touch

தொடர்பு கொள்ள

Dear Reader,
To contact us please drop an e-mail to any one of the e-mail addresses mentioned below.
meeradevotees@gmail.com
radha.services@gmail.com
ramanujaservices@gmail.com