குடி அடியார் இவர் கோவிந்தன் தனக்கு என்று
முடி உடை வானவர் முறை முறை எதிர்கொள்ள
கொடி அணி நெடு மதிள் கோபுரம் குறுகினர்
வடிவு உடை மாதவன் வைகுந்தம் புகவே.

(திருவாய்மொழி - 10.9.8)

வைகுந்தம் புகுதலும் வாசலில் வானவர்
வைகுந்தன் தமர் எமர் எமது இடம் புகுத என்று
வைகுந்தத்து அமரரும் முனிவரும் வியந்தனர்
வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே.

(திருவாய்மொழி - 10.9.9)

விதிவகை புகுந்தனர் என்று நல் வேதியர்
பதியினில் பாங்கினில் பாதங்கள் கழுவினர்
நிதியும் நல் சுண்ணமும் நிறை குட விளக்கமும்
மதி முக மடந்தையர் ஏந்தினர் வந்தே.

(திருவாய்மொழி - 10.9.10)

வந்து அவர் எதிர் கொள்ள மா மணி மண்டபத்து
அந்தம் இல் பேரின்பத்து அடியரோடு இருந்தமை
கொந்து அலர் பொழில் குருகூர் சடகோபன் சொல்
சந்தங்கள் ஆயிரத்து இவை வல்லார் முனிவரே.

(திருவாய்மொழி - 10.9.11)

பாசுர எண்: 0
திருவாய்மொழி : 10

முனியே ! நான்முகனே ! முக்கண் அப்பா ! என் பொல்லாக்
கனிவாய்த் தாமரைக் கண் கரு மாணிக்கமே ! என் கள்வா !
தனியேன் ஆர் உயிரே ! என் தலைமிசையாய் வந்திட்டு
இனி நான் போகல் ஒட்டேன் ஒன்றும் மாயம் செய்யேல் என்னையே.

(திருவாய்மொழி - 10.10.1)

பாசுர எண்: 0
திருவாய்மொழி : 10

மாயம் செய்யேல் என்னை; உன் திரு மார்வத்து மாலை நங்கை
வாசம் செய் பூங்குழலாள் திரு ஆணை; நின் ஆணை கண்டாய்;
நேசம் உன்னோடு என்னை உயிர் வேறு இன்றி ஒன்றாகவே
கூசம் செய்யாது கொண்டாய்; என்னைக் கூவிக் கொள்ளாய் வந்து அந்தோ.

(திருவாய்மொழி - 10.10.2)

பாசுர எண்: 0
திருவாய்மொழி : 10

கூவிக் கொள்ளாய் வந்து அந்தோ என் பொல்லாக் கருமாணிக்கமே !
ஆவிக்கு ஓர் பற்றுக் கொம்பு நின் அலால் அறிகின்றிலேன் யான்
மேவித் தொழும் பிரமன் சிவன் இந்திரன் ஆதிக்கு எல்லாம்
நாவிக் கமலக் முதல் கிழங்கே ! உம்பர் அந்த அதுவே.

(திருவாய்மொழி - 10.10.3)

பாசுர எண்: 0
திருவாய்மொழி : 10

உம்பர் அம் தண் பாழே ! ஓ ! அதனுள் மிசை நீயே ! ஓ !
அம்பரம், நல் சோதி; அதனுள் பிரமன்; அரன் நீ;
உம்பரும் யாதவரும் படைத்த முனிவன் அவன் நீ;
எம்பரம் சாதிக்கலுற்று என்னைப் போர விட்டிட்டாயே.

(திருவாய்மொழி - 10.10.4)

பாசுர எண்: 0
திருவாய்மொழி : 10

போர விட்டிட்டு என்னை நீ புறம் போக்கலுற்றால் பின்னை யான்
ஆரைக் கொண்டு எத்தை அந்தோ ! எனது என்பது என்? யான் என்பது என்?
தீர இரும்பு உண்ட நீர் அது போல என் ஆர் உயிரை
ஆரப் பருக எனக்கு ஆரா அமுது ஆனாயே !

(திருவாய்மொழி - 10.10.5)

பாசுர எண்: 0
திருவாய்மொழி : 10

எனக்கு ஆரா அமுதாய் எனது ஆவியை இன் உயிரை
மனக்கு ஆராமை மன்னி உண்டிட்டாய்; இனி உண்டொழியாய்
புனக் காயா நிறத்த புண்டரீகக் கண் செங்கனிவாய்
உனக்கு ஏற்கும் கோல மலர்ப்பாவைக்கு அன்பா ! என் அன்பேயோ !

(திருவாய்மொழி - 10.10.6)

Get in touch

தொடர்பு கொள்ள

Dear Reader,
To contact us please drop an e-mail to any one of the e-mail addresses mentioned below.
meeradevotees@gmail.com
radha.services@gmail.com
ramanujaservices@gmail.com