எல்லியும் காலையும் தன்னை நினைந்தெழ

அருளியவர்: நம்மாழ்வார்
திவ்ய தேசம்: திருக்கடித்தானம்

பாசுர எண்: 0
திருவாய்மொழி : 6

எல்லியும் காலையும் தன்னை நினைந்தெழ
நல்ல அருள்கள் நமக்கே தந்தருள் செய்வான்
அல்லியம் தண்ணந் துழாய்முடி அப்பனூர்
செல்வர்கள் வாழும் திருக்கடித்தானமே.

திருவாய்மொழி (8-6-1)

[பொருள்]

நாராயணன் பேரருளாளன். நம் கவலைகளை எல்லாம் மறக்க செய்து, இரவிலும் பகலிலும் தன்னையே நினைத்திருக்கும்படி நமக்கு அருள் செய்பவன். உயிர்களுக்கு எல்லாம் தந்தையான அவன், செல்வர்கள் வாழ்கின்ற திருக்கடித்தானம் திவ்ய தேசத்தில் எழுந்தருளியுள்ளான். தன் திருமுடியில், அழகானதும், குளிர்ச்சி பொருந்தியதுமான, அல்லி மலர்களுடன் கூடிய துளசி மாலையை அணிந்தவனாய், அழகாய் காட்சி அளிக்கிறான்.

(சொற்பொருள்)

எல்லி - இரவு
துழாய் - துளசி
தண்(மை) - குளிர்ச்சி
அம் - அழகிய

Get in touch

தொடர்பு கொள்ள

Dear Reader,
To contact us please drop an e-mail to any one of the e-mail addresses mentioned below.
meeradevotees@gmail.com
radha.services@gmail.com
ramanujaservices@gmail.com