அருளியவர்: திருமங்கை ஆழ்வார்
திவ்ய தேசம்:
திருச்சிறுபுலியூர்
பாசுர எண்: 0
பெரிய திருமொழி
: 9
கள்ளம் மனம் விள்ளும் வகை கருதிக் கழல் தொழுவீர் !
வெள்ளம் முதுபரவைத் திரை விரியக் கரை எங்கும்
தெள்ளும் மணி திகழும் சிறுபுலியூர்ச் சல சயனத்து
உள்ளும் எனது உள்ளத்துள்ளும் உறைவாரை உள்ளீரே !
(பெரிய திருமொழி 7-9-1)
கள்ளத்தனம் செய்யும் மனம், தூய்மை அடையும் வழியினை எண்ணுபவர்களே ! நீங்கள் சிறுபுலியூர் திவ்ய தேசத்தில் உறையும் "சலசயனப் பெருமான்" திருவடிகளைத் தொழுவீர்களாக. [ அவன் அருள்மாகடல். எனவே நம் மனதை நிச்சயம் தூய்மை செய்திடுவான்.]
தொன்று தொட்டு விளங்கும் சிறுபுலியூர் திவ்ய தேசமானது, பரந்த நீர் நிலையினை உடையது. அந்த நீர் நிலையின் அலைகளின் வெள்ளம், கரையில் பற்பல மணிகளை கொண்டு வந்து தள்ளுகிறது. இப்படிப்பட்ட பெருமை உடைய சிறுபுலியூர் திவ்ய தேசத்தில் பள்ளிக் கொண்டுள்ள பெருமான் எனது உள்ளத்தின் உள்ளேயும் உறைகின்றான். நீங்களும் அவனை தியானம் செய்து மகிழ்வீர்.
விள்ளுதல் - தெளிவாகுதல்
தெள்ளும் - வளமையில் நிரம்பியிருக்கும்; கொழிக்கும்
கழல் - பாதம்; திருவடி
முதுபரவை - பழமையான பரவை
பரவை - பரந்த நீர்நிலை
திரை - அலை
தொடர்பு கொள்ள
Dear Reader,
To contact us please drop an e-mail to any one of the e-mail addresses mentioned below.
meeradevotees@gmail.com
radha.services@gmail.com
ramanujaservices@gmail.com