மாலை நண்ணித் தொழுதெழுமினோ

அருளியவர்: நம்மாழ்வார்
திவ்ய தேசம்: திருக்கண்ணபுரம்

பாசுர எண்: 0
திருவாய்மொழி : 10

மாலைநண் ணித்தொழு தெழுமினோ வினைகெட

காலை மாலைகம லமலர் இட்டுநீர்

வேலைமோ தும்மதில் சூழ்திருக் கண்ணபுரத்து

ஆலின்மே லாலமர்ந் தானடி யிணைகளே.

(திருவாய்மொழி-9.10.1)

மாலை நண்ணித் தொழுது எழுமினோ வினைகெட

காலை மாலை கமல மலர் இட்டுநீர்

வேலை மோதும் மதில் சூழ் திருக்கண்ணபுரத்து

ஆலின் மேலால் அமர்ந்தான் அடி இணைகளே.

(திருவாய்மொழி-9.10.1)

[பொருள்]

பிரளயக் காலத்தில் உலகங்களை எல்லாம் தன் வயிற்றில் அடக்கி ஓர் குழந்தையாய் ஆலிலையின் மேல் அமர்ந்த திருமால், கடல் அலைகள் மோதும் திருக்கண்ணபுரத்தில், பெரிய மதிள்களால் சூழப்பட்ட பெருமை வாய்ந்த கோயிலில் எழுந்தருளியிருக்கிறான். காலையும் மாலையும் நீங்கள் அவனை அணுகி, தாமரை மலர் கொண்டு அவன் திருவடிகளை வழிபாடு செய்தால் வினைகள் ஒழிந்து பேரின்பம் பெறலாம்.

(சொற்பொருள்)

மால் - அன்பு, அன்பே உருவான திருமால்நண்ணுதல் - அணுகுதல்கமலம் - தாமரைவேலை - கடல், பரந்த நீர்நிலை, அலைஆல் - ஆலமரம், வெள்ளம், ஓர் அசைச்சொல்

Get in touch

தொடர்பு கொள்ள

Dear Reader,
To contact us please drop an e-mail to any one of the e-mail addresses mentioned below.
meeradevotees@gmail.com
radha.services@gmail.com
ramanujaservices@gmail.com