அருளியவர்: நம்மாழ்வார்
திவ்ய தேசம்:
திருவனந்தபுரம்
பாசுர எண்: 0
திருவாய்மொழி
: 2
கெடும் இடராய வெல்லாம் 'கேசவா !' என்னும் நாளும்
கொடுவினை செய்யும் கூற்றின் தமர்களும் குறுக கில்லார்
விடமுடை அரவில் பள்ளி விரும்பினான் சுரும்பு அலற்றும்
தடமுடை வயல் அனந்தபுர நகர் புகுதும் இன்றே.
(திருவாய்மொழி - 10.2.1)
"கேசவா!" என்று கண்ணனை நாளும் அழைக்க, துன்பங்கள் அனைத்தும் தொலைந்து போகும். துன்பங்கள் தரும் எமனுடைய சேவகர்களும் அருகில் வரமாட்டார்கள்.
வண்டுகள் ரீங்காரமிடும் நீர்நிலைகள் நிறைந்த வயல்களால் சூழப்பட்ட அழகான திவ்யதேசம் திருவனந்தபுரம். அந்த திவ்யதேசத்தில் ஆதிசேடன் மேல் விரும்பி படுத்திருக்கும் கேசவனைக் காண இன்றே அவ்வூர் புகுவோம்.
இடர் - துன்பம்
விடம் - நஞ்சு (விஷம்)
விடம் உடை அரவம் - திருமால் பள்ளி கொண்டிருக்கும் ஆதிசேடன்
தமர் - சேவகர்
பள்ளி - படுக்கை
தடம் - நீர்நிலை; கரை; வரம்பு
சுரும்பு அலற்றும் - வண்டுகள் ரீங்காரமிடும்
தொடர்பு கொள்ள
Dear Reader,
To contact us please drop an e-mail to any one of the e-mail addresses mentioned below.
meeradevotees@gmail.com
radha.services@gmail.com
ramanujaservices@gmail.com