அருளியவர்: நம்மாழ்வார்
திவ்ய தேசம்: பொது

பாசுர எண்: 2286
திருவாய்மொழி : 9

சிறப்பில் வீடு சுவர்க்கம் நரகம்*
இறப்பில் எய்துக, எய்தற்க* யானும்
பிறப்பில் பல்பிற விப்பெரு மானை*
மறப்பொன் றின்றியென் றும்மகிழ் வேனே.
(திருவாய்மொழி - 2.9.5)

சிறப்பில் வீடு சுவர்க்கம் நரகம்*
இறப்பில் எய்துக, எய்தற்க* யானும்
பிறப்பில் பல் பிறவிப் பெருமானை*
மறப்பு ஒன்று இன்றி என்றும் மகிழ்வேனே.
(திருவாய்மொழி - 2.9.5)

siRappil veedu suvarkgam naragam
iRappil eidhuga, eidharkka* yaanum
piRappil palpiRavi perumaanai
maRappu ondRu indRi endRum magizhvEnE.
(Thiruvaimozhi - 2.9.5)

At the end of this birth, I am prepared for any eventuality. I may attain liberation or go to heaven or go to hell. It is immaterial to me, for I have resolved to meditate on the birthless Lord, who for the sake of His devotees comes to this earth in various forms. Wherever I go to, I shall ever think upon His grace, His infinite auspicious qualities, His admirable ploys and exploits and be immersed in divine bliss.

கவளயானைக் கொம்பொசித்த கண்ணனென்றும்* காமருசீர்க்
குவளைமேக மன்னமேனி கொண்டகோனென் னானையென்றும்
தவளமாட நீடுநாங்கைத் தாமரையாள் கேள்வனென்றும்*
பவளவாயா ளென்மடந்தை பார்த்தன்பள்ளி பாடுவாளே.

(பெரிய திருமொழி - 4.8.1)

கவள யானைக் கொம்பு ஒசித்த கண்ணன் என்றும்* காமருசீர்க்
குவளை மேகம் அன்ன மேனி கொண்ட கோன் என் ஆனை என்றும்
தவள மாட நீடு நாங்கைத் தாமரையாள் கேள்வன் என்றும்*
பவள வாயாள் என் மடந்தை பார்த்தன் பள்ளி பாடுவாளே.
(பெரிய திருமொழி - 4.8.1)

kavala yaanai kombu osiththa kannan enrum* kaamaruseer
kuvalai megam anna meni konda kOn en aanai endrum
thavala maada needu naangai thaamaraiyaal kelvan endrum*
pavala vaayal en madandhai paarththan palli paaduvaale.
(Periya Thirumaozhi - 4.8.1)

'Rutted elephant's tusk remover - Kanna, most adorable Lord !', 'O ! Lotus hued Lord!', ' O ! Hue of dark cloud !', 'My King !', 'My elephant-like majestic Master !' 'In the town of Nangai, famous for white colored skyscrapper mansions, my Lord of Lotus Dame !' -- So sings my tender daughter, through her lips of coral hue, on the Lord of Paarththan-Palli. (Rutted elephant refers to the elephant, Kuvalayapeedam, sent by Kamsa to kill Krishna.)

Thirumangai Azhwar imagines himself as both the mother and the devotional daughter in this pasuram.

தாவளந்துலக முற்றும் தடமலர்ப் பொய்கை புக்கு
நாவள
ம் நவின்றங்கேத்த நாகத்தின் நடுக்கம் தீர்த்தாய் !
மாவளம் பெருகி மன்னு மறையவர் வாழும் நாங்கைக்
காவளம்பாடிமேய கண்ணனே ! களைக்கணீயே.

(பெரிய திருமொழி - 4.6.1)

தாவளந்து உலகம் முற்றும் தடமலர்ப் பொய்கை புக்கு
நாவளம் நவின்று அங்கு ஏத்த நாகத்தின் நடுக்கம் தீர்த்தாய் !
மாவளம் பெருகி மன்னும் மறையவர் வாழும் நாங்கைக்
காவளம்பாடி மேய கண்ணனே ! களைக்கண் நீயே.
(பெரிய திருமொழி - 4.6.1)

thaavalandhu ulagam muttrum thadamalar poigai pukku
naavalam navinru angu yetha naagaththin nadukkam theerththaai
maavalam perugi mannum maraiyavar vaazhum naangai
kaavalampaadi meya kannane ! kalaikkan neeye.
(Periya Thirumozhi - 4.6.1)

O,Krishna ! You took the whole earth in one stride. You entered the lotus tank and saved the chanting devotee elephant ! You reside with knowledge-wealthy Vedic seers in Nangur's Kavalampadi. You are my sole refuge !

பாசுர எண்: 0
திருவாய்மொழி : 2

கங்குலும் பகலும் கண்துயி லறியாள்
கண்ணநீர் கைகளால் இறைக்கும்*
சங்கு சக்கரங்கள் என்றுகை கூப்பும்
'தாமரைக் கண்' என்றே தளரும்*
எங்ஙனே தரிக்கேன் உன்னைவிட் டென்னும்
இருநிலம் கைதுழா விருக்கும்*
செங்கயல் பாய்நீர்த் திருவரங் கத்தாய்!
இவள்திறத் தென்செய்கின் றாயே?

(திருவாய்மொழி 7.2.1)

கங்குலும் பகலும் கண் துயில் அறியாள்
கண்ண நீர் கைகளால் இறைக்கும்*
சங்கு சக்கரங்கள் என்று கை கூப்பும்
'தாமரைக் கண்' என்றே தளரும்*
'எங்ஙனே தரிக்கேன் உன்னை விட்டு?' என்னும்
இருநிலம் கைதுழா இருக்கும்*
செங்கயல் பாய்நீர்த் திருவரங்கத்தாய்!
இவள் திறத்து என் செய்கின்றாயே?
(திருவாய்மொழி 7.2.1)

அருளியவர்: திருமங்கை ஆழ்வார்
திவ்ய தேசம்: திருக்கூடலூர்

பாசுர எண்: 0
பெரிய திருமொழி : 2

தாந்தம் பெருமை யறியார்* தூது
வேந்தர்க் காய வேந்த ரூர்போல்*
காந்தள் விரல்மென் கலைநன் மடவார்*
கூந்தல் கமழும் கூடலூரே.
(பெரிய திருமொழி - 5.2.1)

 

தாம் தம் பெருமை அறியார்* தூது
வேந்தர்க்கு ஆய வேந்தர் ஊர்போல்*
காந்தள் விரல் மென் கலை நல் மடவார்*
கூந்தல் கமழும் கூடலூரே.
(பெரிய திருமொழி - 5.2.1)

 

அறிவ தரியான் அனைத்துலகும்
உடையான் என்னை யாளுடையான்*
குறிய மாணி யுருவாய
கூத்தன் மன்னி யமருமிடம்*
நறிய மலர்மேல் சுரும்பார்க்க
எழிலார் மஞ்ஞை நடமாட*
பொறிகொள் சிறைவண் டிசைபாடும்
புள்ளம் பூதங்குடிதானே.

(பெரிய திருமொழி - 5.1.1)
 

அறிவது அரியான் அனைத்து உலகும்
உடையான் என்னை ஆள் உடையான்*
குறிய மாணி உரு ஆய
கூத்தன் மன்னி அமரும் இடம்*
நறிய மலர்மேல் சுரும்பு ஆர்க்க
எழில் ஆர் மஞ்ஞை நடம் ஆட*
பொறி கொள் சிறை வண்டு இசை பாடும்
புள்ளம் பூதங்குடி தானே.
(பெரிய திருமொழி - 5.1.1)

aRivadhu ariyaan anaithu ulagum
udaiyaan ennai aaludaiyaan
kuRiya maaNi uruvaaya
kooththan manni amarumidam
naRiya malarmEl surumbaarkka
ezhilaar majjnai nadamaada
poRikoL siRaivaNdu isai paadum
puLLam boothamkudi thaane.

(periya thirumozhi - 5.1.1)

பாசுர எண்: 0
பெரிய திருமொழி : 10

ஆய்ச்சியர் அழைப்ப வெண்ணெயுண் டொருகால்
ஆலிலை வளர்ந்த எம்பெருமான்*
பேய்ச்சியை முலையுண் டிணைமரு திறுத்துப்
பெருநிலம் அளந்தவன் கோயில்
காய்த்தநீள் கமுகும் கதலியும் தெங்கும்
எங்குமாம் பொழில்களின் நடுவே*
வாய்த்தநீர் பாயும் மண்ணியின் தென்பால்
திருவெள்ளி யங்குடி அதுவே.
(பெரிய திருமொழி - 4.10.1)

 

ஆய்ச்சியர் அழைப்ப வெண்ணெய் உண்டு ஒருகால்
ஆல் இலை வளர்ந்த எம் பெருமான்*
பேய்ச்சியை முலை உண்டு இணை மருது இறுத்துப்
பெருநிலம் அளந்தவன் கோயில்
காய்த்த நீள் கமுகும் கதலியும் தெங்கும்
எங்கும் ஆம் பொழில்களின் நடுவே*
வாய்த்த நீர் பாயும் மண்ணியின் தென்பால்
திருவெள்ளியங்குடி அதுவே.
(பெரிய திருமொழி - 4.10.1)

 

அருளியவர்: திருமங்கை ஆழ்வார்
திவ்ய தேசம்: திரு இந்தளூர்

பாசுர எண்: 0
பெரிய திருமொழி : 9

நும்மைத்தொழுதோம் நுந்தம் பணிசெய்திருக்கும் நும்மடியோம்
இம்மைக்கின்பம் பெற்றோமெந்தா யிந்தளூரீரே !
எம்மைக்கடிதாக் கருமமருளி யாவாவென்றிரங்கி
நம்மையொருகால் காட்டி நடந்தால் நாங்களுய்யோமே ?
(பெரிய திருமொழி - 4.9.1)

நும்மைத் தொழுதோம் நும் தம் பணி செய்து இருக்கும் நும் அடியோம்
இம்மைக்கு இன்பம் பெற்றோம் எந்தாய் ! இந்தளூரீரே !
எம்மைக் கடிதாக் கருமம் அருளி "ஆவா!" என்று இரங்கி
நம்மை ஒருகால் காட்டி நடந்தால் நாங்கள் உய்யோமே ?
(பெரிய திருமொழி - 4.9.1)

அருளியவர்:
திவ்ய தேசம்:

பாசுர எண்: 1

அடியோமோடும் நின்னோடும்
பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு *
வடிவாய் நின் வல மார்பினில்
வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு*
வடிவார் சோதி வலத்துறையும்
சுடராழியும் பல்லாண்டு*
படை போர் புக்கு முழங்கும்
அப்பாஞ்சசன்னியமும் பல்லாண்டே.

[விளக்கம்]
(கிருஷ்ணா!) நீயும் உன் பக்தர்களும் என்றும் கூடியே இருக்க வாழ்த்துக்கள்! உனது வலது மார்பினில் அழகாய் குடி கொண்டிருக்கும் லக்ஷ்மி பிராட்டிக்கு ஒரு குறைவும் ஏற்படாதிருக்க வாழ்த்துக்கள் ! அழகிய வடிவுடன் சுடர் விட்டு ப்ரகாசிக்கும் உனது வலது கை சக்கரத்திற்கும் ஒரு குறைவும் வராது இருக்க வாழ்த்துக்கள் ! போர் களத்தில் ஆயுதமாய் புகுந்து எதிரிகளை நடுங்க செய்யும் பாஞ்சஜன்யம் என்கின்ற உனது சங்கும் என்றும் ஒரு குறைவும் இன்றி இருக்க வாழ்த்துக்கள் !

(சொற்பொருள்)
படை - ஆயுதம்
புக்கு - புகுந்து
ஆழி - சக்கரம்
ஆர் - கூர்மை; அழகு
வடிவார் சோதி - வடிவு + ஆர் + சோதி

வண்ண மால்வரையே குடையாக
மாரி காத்தவனே ! மதுசூதா ! *
கண்ணனே ! கரி கோள் விடுத்தானே !
காரணா ! களிறட்ட பிரானே !
எண்ணுவார் இடரைக் களைவானே !
ஏத்த அரும் பெரும் கீர்த்தியினானே !
நண்ணி நான் உன்னை நாடொறும் ஏத்தும்
நன்மையே அருள் செய் எம்பிரானே !

(பெரியாழ்வார் திருமொழி - 5-1-8)

Get in touch

தொடர்பு கொள்ள

Dear Reader,
To contact us please drop an e-mail to any one of the e-mail addresses mentioned below.
meeradevotees@gmail.com
radha.services@gmail.com
ramanujaservices@gmail.com