அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

கருள் உடைய பொழில் மருதும் கதக் களிரும்

பிலம்பனையும் கடிய மாவும்

உருள் உடைய சகடரையும் மல்லரையும்

உடைய விட்டு ஓசை கேட்டான்

இருள் அகற்றும் எறி கதிரோன் மண்டலத்தூடு

ஏற்றி வைத்து ஏணி வாங்கி

அருள் கொடுத்திட்டு அடியவரை ஆட்கொள்வான்

அமரும்ஊர் அணி அரங்கமே.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

பதினாறாம் ஆயிரவர் தேவிமார்

பணிசெய்யத் துவரை என்னும்

அதில் நாயகராகி வீற்றிருந்த

மணவாளர் மன்னு கோயில் ;

புது நாள்மலர்க் கமலர் எம்பெருமான்

பொன் வயிற்றிற் பூவே போல்வான்

பொதுநாயகம் பாவித்து இறுமாந்து

பொன் சாய்க்கும் புனல் அரங்கமே.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

ஆமையாய்க் கங்கையாய் ஆழ் கடலாய்

அவனியாய் அரு வரைகளாய்

நான்முகனாய் நான்மறையாய் வேள்வியாய்த்

தக்கணையாய்த் தானும் ஆனான்

சேமம் உடை நாரதனார் சென்று சென்று

துதித்து இறைஞ்சக் கிடந்தான் கோயில்;

பூ மருவிப் புள் இனங்கள் புள் அரையன்

புகழ் குழறும் புனல் அரங்கமே.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

மைத்துனன்மார் காதலியை மயிர்

முடிப்பிடித்து அவர்களையே மன்னர் ஆக்கி

உத்தரைதன் சிறுவனையும் உய்யக்கொண்ட

உயிராளன் உறையும் கோயில் ;

பத்தர்களும் பகவர்களும் பழமொழிவாய்

முனிவர்களும் பரந்த நாடும்

சித்தர்களும் தொழுது இறைஞ்சத்

திசைவிளக்காய் நிற்கின்ற திருவரங்கமே.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

குறள் பிரமசாரியாய் மாவலியைக்

குறும்பு அதக்கி அரசுவாங்கி

இறைப்பொழுதில் பாதாளம் கலவிருக்கை

கொடுத்து உகந்த எம்மான் கோயில் ;

எறிப்பு உடைய மணிவரைமேல் இளஞாயிறு

எழுந்தாற்போல் அரவு அணையின் வாய்

சிறப்பு உடைய பணங்கள்மிசைச் செழுமணிகள்

விட்டு எறிக்கும் திருவரங்கமே.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

உரம் பற்றி இரணியனை உகிர்நுதியால்

ஒள்ளிய மார்வு உறைக்க ஊன்றிச்

சிரம் பற்றி முடி இடியக் கண் பிதுங்க

வாய் அலறத் தெழித்தான் கோயில்;

உரம் பெற்ற மலர்க்கமலம் உலகு அளந்த

சேவடி போல் உயர்ந்து காட்ட

வரம்பு உற்ற கதிர்ச்செந்நெல் தாள்சாய்த்துத்

தலை வணக்கும் தண் அரங்கமே.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

தேவு உடைய மீனமாய் ஆமையாய்

ஏனமாய் அரியாய்க் குறளாய்

மூஉருவில் இராமனாய்க் கண்ணனாய்க்

கற்கியாய் முடிப்பான் கோயில் ;

சேவலொடு பெடை அன்னம் செங்கமல

மலர் ஏறி ஊசல் ஆடிப்

பூஅணைமேல் துதைந்து எழு செம்பொடி ஆடி

விளையாடும் புனல் அரங்கமே.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

செரு ஆளும் புள்ளாளன் மண்ணாளன்

செருச்செய்யும் நாந்தகம் என்னும்

ஒரு வாளன் மறையாளன் ஓடாத

படையாளன் விழுக்கை யாளன்

இரவு ஆளன் பகலாளன் எனையாளன்

ஏழு உலகப் பெரும் புரவாளன்

திருவாளன் இனிதாகத் திருக்கண்கள்

வளர்கின்ற திருவரங்கமே

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

கைந்நாகத்து இடர் கடிந்த கனல் ஆழிப்

படை உடையான் கருதும் கோயில்

தென் நாடும் வடநாடும் தொழுநின்ற

திருவரங்கத் திருப்பதியின் மேல்

மெய்ந்நாவன் மெய்அடியான் விட்டுசித்தன்

விரித்த தமிழ் உரைக்க வல்லார்

எஞ்ஞான்றும் எம்பெருமான் இணையடிக்கீழ்

இணை பிரியாது இருப்பர் தாமே.

துப்புடையாரை அடைவது எல்லாம்

சோர்விடத்துத் துணை ஆவர் என்றே ;

ஒப்பிலேன் ஆகிலும் நின் அடைந்தேன்

ஆனைக்கு நீ அருள் செய்தமையால் ;

எய்ப்பு என்னை வந்து நலியும் போது அங்கு

ஏதும் நான் உன்னை நினைக்கமாட்டேன்;

அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்.

அரங்கத்து அரவணைப் பள்ளியானே

Get in touch

தொடர்பு கொள்ள

Dear Reader,
To contact us please drop an e-mail to any one of the e-mail addresses mentioned below.
meeradevotees@gmail.com
radha.services@gmail.com
ramanujaservices@gmail.com